Posts

Showing posts from 2022

மனிதனாய் பிறந்து விட்டேன்...

Image
யாரையும் வெறுப்பதில்லை-நான்  எவரையும் மறப்பதில்லை வேண்டாமென்றெனை ஒதுக்கிவிட்டால் உயிரே போயினும் ஏற்பதில்லை... அள்ளித் தந்தவர்களை எள்ளி ஆடுவதில்லை தள்ளிப் போனாலும் கொல்லி வைத்துப்போவதில்லை... துள்ளிப் போனவர்களே போய் விடுங்கள் தத்தளித்து கிடக்கிறேன் தடம் மாறியும் வாராதீர்... உள்ளொன்றும் வெளியொன்றும் விலை பேசி எதைதேடிப் பிடித்துவிட்டாய் -உன்  மதிப்பையும் இழந்து விட்டாய்... மனிதனாய் பிறந்து விட்டேன் தனிமரமாய் நின்று விட்டேன் காலங்களே சொல்லுங்கள் இனியென்  கல்லறையாவது பூக்கட்டும்... -விசித்திரக்கவி 

எழுந்து வாடா என் தோழா...

Image
உரிமைகளை விற்று ஊமையாகிக் கொண்டிருக்கிறாய் உணர்வுகளைத் தொலைத்து ஊணமாகித் தவிக்கிறாய்... உழைப்பை மறந்து ஊதாரியாய் திறிகிறாய் உரக்கப் பேசினாலே-உன் நரம்பேயுனைக் கொன்றுவிடும்  தொடுதிரையில் தொட்டபடியே தூங்கிக் கிடக்கிறாய் தூசுகள் படிந்து  துரும்பாய் உதிர்கிறாய்... உதிரத்தின் வேகத்தில் அதிரும் இளமையடா  ஆகாய வீதியில்-இங்கு  ஆழ்கடலே பாயுமடா... எழுந்து வாடா என் தோழா  ஏணிகள் தேவையில்லை துணிவுகள் போதும்... -விசித்திரக்கவி...