Posts

Showing posts with the label புதிய நாடு

புதிய நாடு 3

Image
                  30/01/21                   ✍விசித்திரக்கவி  அன்றைய நிகழ்வு அவனது மனதிற்குள், ஓயாமல் அடிக்கும் அலைகளை விட, கடும் சுனாமியின் சீற்ற அலைகளாக அடித்து கொண்டிருந்தது... பிஞ்சு மனதிற்குள்ளும் எரிமலையும் வெடிக்கும் என்பது, அன்று அவன் கண்களில் மூலம் கர்ச்சித்தது... அசகாய சூரனெல்லாம் அடங்கி போகும் அளவுக்கு கண்களில் ஒரு மாபெரும் பார்வை... ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை அல்லவா... மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்றுள்ள சில வெள்ளை மனம் கொண்ட மாமனிதர்களும், மகத்தான அரசியல் தலைவர்களும் நிலமையை கண்டு கண்ணீர் வந்தும் காட்டாமல், வயிற்றின் பாட்டையறிந்து இயன்றதை கொடுத்து உதவினார்கள்... சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரமாட்டான் என்னும் முதுமொழிக்கேற்ப்ப, உதவியக் காரங்களின் கருணைகள் யாவும், அதை கண்கானிப்பவனின் கைக்குள் அடக்கமாகி போவதை கண்டால், கண்களே குருடாகி இருக்கலாம் என்றே மனம் கொதிக்கிறது... எழுத்துக்கள் மூலம் பார்க்கும் நமக்கே இப்படி என்றால் இழப்பில் உள்ளவனின் உள்ளத்தில் எப்படி இருக்கும்,இடி ...

புதிய நாடு 2

Image
                           ✍️விசித்திரக்கவி  எந்த நிலையிலும் தவறாமல் தன்னுடைய பொன்னான கரங்களை நீட்டி அனைவரையும் அணைக்கும் ஆதவனே அன்று, எந்த கரங்களை நீட்டி அணைப்பதென்று தெரியாமல் ஸ்தம்பித்துப்போய், காட்சிகளை கண்ட கண்களில் செந்நிறகண்ணீர் வடிய, ஆத்திரத்தின் உச்சியில் முதல் முறையாக தனக்கு தானே தீ மூட்டி தண்டனை ஏற்பதாக நினைத்து தற்கொலைக்கு முயற்சி செய்கின்ற வேளையில்... அதே சமயம் இன்னொரு புறத்தில்,நிலவாய் வேடிக்கை பார்த்த சில அரக்க குணம் படைத்த அரசியல் வாதிகளும்,அதற்கு துணை போன நட்சத்திரங்களாகிய அரசாங்க ஊழியர்களும், இரவு நடந்த கொடூரமான சம்பவத்திற்கு இன்று மாலை இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கற்பாவினை தயார் செய்கிறார்கள்... நகரம் நரகமாய் மாறி கண்களே நடுங்கும் வகையில் காட்சியழிக்கிறது... இறந்தவர்கள் ஒருபுறம், பறிகொடுத்தவர்கள் ஒரு புறம், உயிருக்கு போராடும் பிஞ்சுகள் ஒரு புறம், ஐயோ,கை குழந்தை ஒன்று பசியின் கொடுமையில் வடிக்கின்ற செங்குருதிதனை தன் செந்தாமரை இதழ்களால், தாய் எவள் என்றே தெரியாமல் தீண்டும் காட்சிதனை கண்டு கற்ச...

புதிய நாடு

Image
                              ✍விசித்திரக்கவி                                         06/01/2021 நம் கற்பனையின் கண்களுக்கு புலப்படாத  தூரத் தேசத்து நகரமொன்றில் ஏற்பட்டப் பெரும் சத்தத்தின் அதிர்வில் ஐந்து வயது நிரம்பாதச்  சிறுவன் எழுந்து  தன் தாய் மற்றும் தகப்பனை தேடி திறந்தக் கதவின் வழியே வெளியே வீதிக்கு வருகிறான்... அந்த விடி வெள்ளி தோன்றாத அதிகாலை பொழுதில்... மூன்றாவது படி தடுக்கி கீழே விழுகையில் தான் தெரிகிறது அழகிய வீதியின் அலங்கோலம்... நீண்டப் பசியில் இருந்தது போல வீதியின் இரு புறங்களிலும் பற்றி எரியும் நெருப்பு... அழகாக உருவம் காட்டக் கூடிய கண்ணாடிகளின் உடைந்தச் சிதறல்கள்... இடர்பாடுகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்கள்... கண்ணீர் புகை குண்டுகள் காதை துளைக்கும் தோட்டங்களின் சத்தங்கள் இமயம் உருகும் அளவுக்கு அலறல் ஓலங்கள்... தன் சக்திக்கு தாண்டி பீச்சி அடிக்கும் தண்ணீரின் வேகத்தில் கரையாதக...