Posts

Showing posts from February, 2021

இப்படியும் சிலர்

        27/02/21 விண்ணை முட்டும் விரோத விமர்சனங்கள் விசித்திர வீனனின் வயோதிக வார்த்தைகள்... இல்லாத மேடையில் பொல்லாத கச்சேரி சிங்காரியின் ஒய்யாரத்தில் ஒட்டகம் சிறுத்துப்போச்சி... பட்டம் பாடுதடி பட்டாம்பூச்சியோடு பந்தயமாம் பட்டம் பெற்றதால் படம் காட்டுதடி... ஐயோ!... பாவம் பட்டமே நூலறுந்துப்போச்சி பகட்டு வாழ்க்கையோ பாதியிலே போச்சி... வாய்முழுக்கப் பேச்சி-அதனால் வயிறும் வத்திப்போச்சி... போடா போடா  இங்கே நானும் புத்தனடா...            ✍விசித்திரக்கவி 

நான்

Image
                 22/2/21 கவலைகளை நான் கடன் வாங்கிவிட்டேன் கற்பனைகளை கண்ணாடி குடுவைக்குள் தொலைத்துவிட்டேன்... காரணங்களை தேடி கண்ணீரோ... உலா போகிறது... சத்தமின்றி மீண்டுமது எனையே அணைக்கிறது... தழுவிய காயங்கள் தாங்கிய மார்புகள் தவித்த இதயம்-அது  தாங்காத துயரம்... தொலைவாய் போகிறேன் தொலைந்தும் போகிறேன் தொலைதூர நிலவாய் துக்கம் கொள்கிறேன்... துடித்தும் பார்க்கிறேன் துளிர்த்தும் பார்க்கிறேன் துணிவு இழந்து தூனாய் நிற்கிறேன்... அழுகவே அதிகம் ஆசை கொள்கிறேன் இரவெல்லாம் முயற்சித்து இறுதியில் தோற்கிறேன்... ஓய்வின்றி அழுகிறேன் ஆராவாரம் இல்லையாம்... ஆத்திரத்தின் உச்சியில் சூத்திரம் தவறாம்... சுற்றிச் சுற்றி சுகங்களை பார்க்கிறேன் சுதந்திர வானிலது சூனியமாய் போனது... இருந்தும் இருக்கவே இறுதிவரை முயல்கிறேன்... மூச்சொன்று உள்ளவரை முழுமையாய் இருப்பேன்...            ✍விசித்திரக்கவி

தொலைதூரத்து சொந்தமவள்...

கோடைக்கால வெப்பத்தில் குற்றாலச் சாரலாய் குட்டி தேவதையவளை குறும்புகாரியெனக் கண்டேன்... கண்களால் பேசினேன் யார் அவள் என் தாயின் அசல் நகலா... இல்லை இல்லை எனக்காய் பிறந்த அன்னை உருவத்தின் அதிசய மகளா... அதிர்ச்சியிலே சிலநாள் ஆனந்தத்தில் பலநாள் வார்த்தைகள் இல்லை வாய்ப்பேச வாய்ப்பில்லை... கடந்தது காலம் கனிந்தது பொழுது கூடியது கூட்டம் கொட்டியது மேளம்... இணைந்தது உறவுகள் இணைத்தது இருமனம் அது தான் அழகியத் திருமணம்... அங்கே தான் அந்த தூரதேசத்து பெண்நிலவை கண்டேன் தன்னிலை அறிந்தேன்... இல்லாத உறவொன்றை இமையோரம் கண்டேன் இல்லத்தில் இல்லாத தங்கையென கொண்டேன்... தங்கையென வந்தாள்-பல  தாளங்கள்  தந்தாள் தலைமேல் குதித்தாள் தவிகையிலே தாயாய் தாங்கினாள்... காணாத விழிகளில் கரையாத நினைவுகளாய் கன்னத்தில் வழியும் வலிநிறைந்த கண்ணீர்... வழிகள் தேடி இணைய வீதிகளிலே இதயத்தின் துடிப்பை இருவிழியில் கண்டேன்... சண்டைகள் எங்களின் பெரும் மகிழ்ச்சி அமைதியே எங்களின் மாபெரும் விரோதி... விடிகின்ற பொழுதெல்லாம் எங்களின் குறும்பின் சிரிப்பில் பிடித்து வைத்த ஆயுள்கைதிகள்... நாங்கள் நாங்களாய் நாட்கள் எல்லாம் எங்களின் வசங்களாய்-...

தாவணி நிலவே...

Image
                     17/02/21 பாதகத்தி நீயும் -தான் படபடக்கும் நெஞ்சத்தில் படை யெடுத்தாய்... பட்டாகத்தி இல்லாம- உன்  கூர்விழிகாட்டி பாவிநெஞ்சத்தை பதற வைத்தாய்... கரிசல்காட்டு பூவே -உன்  கண்ணிரெண்டில் விழுந்தேன் அங்கேதான் இதயமிழந்தேன்... இரண்டாம் நிலவே -என்  இம்சை ராணியே அகிம்சையாயிம்சை செய்யாதே... வராமல் வருகிறாய் தாராமல் தருகிறாய் தனியே தவிக்கிறேன்... கனவுகளிலே மிதக்கிறேன் நிஜத்தினிலே வாழ்கிறேன் நித்தமுனை நினைக்கிறேன்... உன்னைத்தான் சுவாசிக்கிறேன் கூண்டுக்கிளியாய் உன்னுள் அடைபட ஆசைகொள்கிறேன்... தாவணி நிலவே சொட்டும் மழையே குளிரும் அகலே... குட்டி தேவதையே குறும்பு சிரிப்பே வெட்க சரலே... வெப்ப சலனமே வீசிவரும் காற்றே உன்னாலே வாடுகிறேன்... உன் பெயரையே தினம் படுகிறேன் திக்கிழந்து திரிகிறேன்... தீயாய் எரிகிறேன் என்னையே வெறுக்கிறேன் உன்னையே தேடுகிறேன்... அணைக்க வந்திடு ஆகாசம் விட்டு சுவாசம் தந்திடு... அனைத்தும் நீயே ஆகிடு பார்வையின் அர்த்தம்தனை பாவை நீயும் கூறிடு... போதும் போதும் என்னுள் வாழ்ந்திடு புது வார்த்தைகளை சொல்லிடு.....

யாதொன்றும் இல்லை

Image
மனமே... ஏங்குகிறேன்... கேட்க யாருமில்லை நாதியற்று கிடக்கிறேன் நாளுமிங்கே தவிக்கிறேன்... கதவுகள்பல தட்டினேன் -அது  வாசல் வரை வாய் திறந்து வாழ்த்திப் போனது... யாரையோதேடி ஓடுகிறேன் ஓட்டத்தின் நடுவே ஆங்காங்கே விழுகிறேன் மீண்டும் எழுகிறேன்... மின்னலை பார்க்கிறேன் மின்மினியை அணைக்கிறேன் கானல்நீரை குடிக்கிறேன் கலங்கித்தான் போகிறேன்... காயங்கள் கண்டேன் பிழைகள் கொண்டேனா  பித்தனாய் கொஞ்சம் சித்தமிழந்து போகிறேன்... உடலோடு வாழ்கிறேன் உயிரை தேடுகிறன் உணர்வுகளை வெறுக்கிறேன் உலகமதில் ஊமையாகிப்போகிறேன்... கண்டது சில கோடி காணாதது பல கோடி நம்பிக்கை கொண்டதால் நான் மட்டும் தெருக் கோடி... அட போடி... போன தெல்லாம் போன பின்னே நாமும் ஒருபிடி சாம்பல் தானடி...         ✍விசித்திரக்கவி 

ஏனடி மறந்தாய்

Image
நெஞ்சம் மறப்பதில்லை நினைவுகள் அழிவதில்லை கனவுகள் கலைவதில்லை அலைகள் ஓய்வதில்லை அவள் மட்டும் என்னை நினைப்பதே இல்லை... காதல் தந்தாள் கற்பனைகள் தந்தாள்... ஏனோ என்னை தனியே விட்டுவிட்டாள்... தீயிலே வாடுகிறேன் தீவாய் போகிறேன்... வார்த்தை ஒன்றை வாய்திறந்து சொல்லிவிடு என்னையும் கொஞ்சம் நீ வாழவிடு...                  ✍விசித்திரக்கவி

என் இதயமே

Image
மார்புக் கூட்டுக்குள் மத்தளம் கொட்டுதடி மங்கையுன் விழிகளில் -அது மதிமயங்கி போகுதடி... கனகவள்ளியுனை நினைத்து -என் கனவுகள் நீளுதடி காட்சிகளுக்கு நித்தமது கண்களில் ஏங்குதடி.. வண்ண மயிலே வளமை புயலே வாலிப நிலவே வந்துவிடு வந்துவிடு வரமொன்றை தந்துவிடு...                  ✍️விசித்திரக்கவி

விடிய போகுது வா...

Image
புதியதொரு காலை-இனி  புதியதாய் பூக்கட்டும் புதுமலரின் வாசம் பூலோகமெல்லாம் வீசட்டும்... வெற்றிநடை போட-நீ  வீரத்தோடு விளையாடு நம்பிக்கையொன்றே நிரந்தரம் -இங்கே நாளுமது சுதந்திரம்... உன்பெயரை சுமக்க இமயம் ஏங்கிகிடக்குது உன்வெற்றியை கொண்டாடவே கடல் ஏழும் காத்துக்கிடக்குது... வாழ்க்கை ஒருமுறை தான் வாழ்ந்தே தீர்ப்போம் வா...                   ✍️விசித்திரக்கவி

தேடுகிறேன்...

Image
என்னை நானே இழந்து தேடுகிறேன்... எப்படி இழந்தேன் யாருக்காக இழந்தேன்... எதற்காக இழந்தேன்-என்பதை அறிந்தவர்கள் அறிந்த பின்னும் அகந்தையில் பேசுகையில்-நான்  அர்த்தமற்று போகிறேன்... அந்த நேரமே அடிவயிற்றில் ஆயிரம் இடி விழுந்தாற்போல் அதனை வலி... எப்படி சொல்வேன் எனக்கும் மனசுண்டு என்பதை...

காட்சி தருவாளா...!

Image
                    03/02/21                     ✍விசித்திரக்கவி  கவிதைகள் ஆயிரம் கண்டேன் அங்கேதான் அவளை கண்டேன் மொழிகள் நூறினை தந்தாள்-என் வார்த்தைகளை பறித்துக் கொண்டாள்... அழகே போர்க்களம் போவது -போல் சின்ன நடையே படையாக சிங்கார படையே நடையாக தேவதையாய் பவனி செல்கிறாள்... அவளது சிலிர்த்த தேகத்தால்-எனை  கொஞ்சம் சிறை வைக்கிறாள் சின்னச் சின்ன சிலுங்களில் அதிகம் ஆட்டி வைக்கிறாள்... பால்நிலவாய் பட்டாடை கட்டி-எனை பார்த்துப் பார்த்து சிரிக்கிறாள் பக்குவமாய் பார்த்தே ஈட்டி-பார்வையினை பாதகத்தி குத்தி போகிறாள்... காயம்பட்ட வேகத்தில் பாவப்பட்ட-எனை பவள பல்லக்கில் கடத்துகிறாள் கடத்தியவளே காதல் மொழிபேசி காற்றாடியாய் சுற்ற வைக்கிறாள்... அவளையே சுற்றிச்சுற்றி வருகிறேன் -அவள் கண்பார்த்து பேச முயல்கிறேன்... மான்குட்டி விரல் பட்டால்-நானோ  தோகை மயிலாய் ஆடுகிறேன்... முயல் குட்டியின் முன்னழகில் முழுவதுமாய் மூச்சிழந்து போகிறேன் பின்னழகின்  கூந்தல் வாசம்பட்டே கொஞ்சம் சுவாசம் கொள்கிறேன்... இனி.....