Posts

Showing posts with the label கவியமும் ஓவியமும்

நெஞ்சோரம் கொஞ்சம் கலவரம் கூட்டடி...!

Image
சித்திரங்கள் பார்க்குதடி சிலையெல்லாம் வேர்க்குதடி...! சிணுங்கி சிணுங்கி நீ சிரித்தால், சித்திரங்கள் பாவமடி... பட்டு உடையில் சிட்டென நீ வந்தால், சட்டென உடையும் என் இதயமடி...! சந்தனமும் குங்குமமும் சங்கீதம் பாடுதடி...! சித்திரை நிலவாய் தேகம் மின்னுதடி...! வளையளும் கொலுசும் என்னடி பேசுது...? உனை கண்டால்-என்  கண்களுமிங்கே கூசுது...! மல்லிகை பூவும் மனசுக்குள்ளே பாடுதோ...! மானே நீ தொட்டதால்,சிலிர்த்ததோ...! தோகை மயிலாய் ஆடுகிறேன்,பாடுகிறேன்...! பாவை நீயும் பார்த்திடடி  நெஞ்சோரம் கொஞ்சம் கலவரம் கூட்டடி...!             ✍விசித்திரக்கவி 

சிந்தை தெளிந்தேன்...

Image
கலையான உனை  சிலையெனக் கண்டேன்...! சிலநேரம் கண்களும்  கவிபாடக் கண்டேன்...! காற்றில் நிழல் அசையக் கண்டேன்...! அப்போதுதான் நான் கொஞ்சமுயிர் கொண்டேன்...! அசைந்தது நிழலா  ஐந்தடி சிலையா...! அதிசயம் கண்டேன் ஆகாயத்தில் பறந்தேன்...! இதயம் இழந்தேன் காட்சிகளில் விழுந்தேன்...! கற்பனையில் தவழ்ந்தேன் காற்றினில் கலந்தேன்...! எண்ணம் தொலைத்தேன் உன்னில் திழைத்தேன், எழுத்தினை கூட்டி காகிதத்தில் கழித்தேன்...! அத்தனையும் பிழையென ஆத்திரத்தில் கிழித்தேன்...! இரத்தம் பிழிந்து, சித்திரமென சிந்தை தெளிந்தேன்...              ✍️விசித்திரக்கவி