Posts

Showing posts with the label சோகம்

சில நேரம்....

Image
(சில நேரம்....) சின்னச் சின்ன கண்ணீர் துளிகளை நிம்மதியென நெஞ்சம் கொஞ்சம் ஏங்குமே... (சில நேரம்....) சொல்ல வரும் வார்த்தைகளை சொல்லாமல் நாடு கடத்த மவுனம் தோன்றுமே... (சில நேரம்....) விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து விதியை நொந்து மனம் பாடுமே... (சில நேரம்....) மயக்கம் கொள்ளும் மானிடர் மத்தியில் மாயவித்தை காட்டுமே மனசாட்சி அதிகமது குத்துமே... (சில நேரம்....) சில கவிதைகள் பல நேரம் காகிதங்களை கண்ணீரில் கரைய வைக்குமே... (சில நேரம்....) எட்டிய பொருள் கிட்டாமல் போனால் நெஞ்சத்தை முட்டுமே துக்கத்தை தூண்டுமே... (சில நேரம்....) தேடித்தேடி சேர்த்ததெல்லாம் தேளாய் கொட்டுமே தேன் கூட தினம் கசக்குமே... (சில நேரம்....) நிழலும் நிம்மதியில் நித்தம் வாழுமே நிஜம் மட்டும் சோதனையில் வாழுமே... (சில நேரம்....) சில நேரம் பல நேரம் நரகத்தில் நாடோடியாய் நடக்க கற்றுத் தருமே... (சில நேரம்....) அந்நேரம் எந்நேரமென இந்நேரம் சில உள்ளங்கள் உள்ளூற பார்த்திருக்குமே...                        _விசித்திரக்கவி    

கற்பனை களவு போனது

Image
                              என்றும் தமிழோடு                       -விசித்திரக்கவி  கற்பனைகள் களவு போனது எழுதாக்கவிதைகள் ஏக்கம் கொள்ளுது, உவமைகளை தொலைத்து விட்டேன்  ஊமையென கொஞ்சம் ஆகிவிட்டேன்…   நெஞ்சம் இங்கே தூங்குது  தஞ்சமென எங்கோ போகுது,  நித்தம் பஞ்சமென பார்க்குது  நித்திரையில் சித்திரையாய் வேகுது… சித்தமெல்லாம் சிதைந்து போகுது  சிந்தனையிலே சிவந்து போகுது,  புருவங்கள் ரெண்டும் புலம்பி  புழுதிக்காற்றில் புழுவென துடிக்குது… காற்றுக்கும் கைகள் இல்லை  கனவுகளுக்கும் எல்லை இல்லை, கதைப்பார் யாரும் இல்லை  கதவடைப்பார் யார் இங்கோ…? வார்த்தைகள் வற்றிப் போய்  முதுகோடொற்றிய வயிற்றைப் பார்த்து  வாயடைத்து தூற்றி போகுது-இனி  மிச்சமென யெதுமீறப் போகுது… ஆண்டவன் பிழையா…? ஆள்கிறவன் பிழையா…?  ஆறறிவுதான் அகிலத்தின் பிழையா…?-இது  அறிந்தவனின் பிழையோ…  இதை யானும் ...

மனிதனாய் பிறந்து விட்டேன்...

Image
கண்களை தொலைத்து விட்டேன், இமைகளை திறந்து  உறக்கத்தினை கனவுகளில் கொஞ்சம் தேடுகிறேன்... உரக்கச் சொல்கிறேன், உருமாறி உருகுழைத்து வேதனையிலே வாழ்கிறேன் புழுவாய் நெளிகிறேன்... நெஞ்சமெல்லாம் வேகுது பஞ்சாயது எரியுது பழிகளை சுமந்து பக்குவமாயது பார்க்குது... பாலென கண்டதெல்லாமெனை பாதாளத்தில் தள்ளுது பூவென கண்டதெல்லாம் பூநாகமாய் சீருது... மனிதனாய் பிறந்து விட்டேன். மன்னித்தே கொஞ்சம் மானமிழந்து விட்டேன்-இதையே மறுபடியும் சகிப்பேனா... கல்லெரிந்த கண்ணாடிப் போல சொல்லெரிந்து சிதறி கிடக்கிறேன் சிக்கித் தவிக்கிறேன் சிந்தனைகளை இழக்கிறேன்... வாழவே நினைக்கிறேன் வார்த்தைகளில் இறக்கிறேன் வெறுமையாய் உணர்கிறேன் வெற்றிடமாய் கிடக்கிறேன்...                  ✍விசித்திரக்கவி 

நீலவானிலே நீயும்,நிலவிலே குடிப்புகுந்தாயா...?

Image
உன் நினைவுகளெல்லாம் கனவுகளாக உருவெடுத்து நித்திரை நேரத்திலெனை நித்தமும் வாட்டுதடி... கண்ணாடி பிம்பமாய் கண்ணெதிரே கலையுதடி... கானல் நீராயது, கண்ணுக்குள் பாயுதடி... கண்ணீரும் செந்நீராய் கன்னத்தில் வழியுதடி... நெஞ்சம் வலியிலே, கொஞ்சம் கதறுதடி... காதல் மொழி பேசும் முன்னே, என்னுள் கவிதை-மொழி  கொஞ்சம் பேசினாய்... காதல் மொழி பேசிய பின்னே, மௌன மொழி -ஏனடி..? கொஞ்சம் சொல்லடி... நெஞ்சில் நிலைத்தவளே, நித்தமெனை விழியாலே நெஞ்சோடு சாய்த்தவளே -நீயும் நித்திரை கொண்டாயா...? நீலவானிலே நீயும், நிலவிலே குடிப்புகுந்தாயா...? காற்றாய் மாறி காதோடு மெல்லமாய் பேசடி...! காலங்கள் பல கடந்தே காத்திருக்கிறேன்... கண்ணோடு உன் நினைவுகளை மட்டுமே சேர்த்திருக்கிறேன்... என் வீட்டு -ராணியே எனக்கு முன்னே, எனைவிட்டு போனதென்ன...? உனக்கு மட்டும் சொர்க்க மென்ன...? ஏனடி போனாய்...? எங்கே போனாய்...? இங்கே, தவிக்கிறேன் நானடி கொஞ்சம் பாரடி...!            ✍️விசித்திரக்கவி              

நான்

Image
                 22/2/21 கவலைகளை நான் கடன் வாங்கிவிட்டேன் கற்பனைகளை கண்ணாடி குடுவைக்குள் தொலைத்துவிட்டேன்... காரணங்களை தேடி கண்ணீரோ... உலா போகிறது... சத்தமின்றி மீண்டுமது எனையே அணைக்கிறது... தழுவிய காயங்கள் தாங்கிய மார்புகள் தவித்த இதயம்-அது  தாங்காத துயரம்... தொலைவாய் போகிறேன் தொலைந்தும் போகிறேன் தொலைதூர நிலவாய் துக்கம் கொள்கிறேன்... துடித்தும் பார்க்கிறேன் துளிர்த்தும் பார்க்கிறேன் துணிவு இழந்து தூனாய் நிற்கிறேன்... அழுகவே அதிகம் ஆசை கொள்கிறேன் இரவெல்லாம் முயற்சித்து இறுதியில் தோற்கிறேன்... ஓய்வின்றி அழுகிறேன் ஆராவாரம் இல்லையாம்... ஆத்திரத்தின் உச்சியில் சூத்திரம் தவறாம்... சுற்றிச் சுற்றி சுகங்களை பார்க்கிறேன் சுதந்திர வானிலது சூனியமாய் போனது... இருந்தும் இருக்கவே இறுதிவரை முயல்கிறேன்... மூச்சொன்று உள்ளவரை முழுமையாய் இருப்பேன்...            ✍விசித்திரக்கவி

யாதொன்றும் இல்லை

Image
மனமே... ஏங்குகிறேன்... கேட்க யாருமில்லை நாதியற்று கிடக்கிறேன் நாளுமிங்கே தவிக்கிறேன்... கதவுகள்பல தட்டினேன் -அது  வாசல் வரை வாய் திறந்து வாழ்த்திப் போனது... யாரையோதேடி ஓடுகிறேன் ஓட்டத்தின் நடுவே ஆங்காங்கே விழுகிறேன் மீண்டும் எழுகிறேன்... மின்னலை பார்க்கிறேன் மின்மினியை அணைக்கிறேன் கானல்நீரை குடிக்கிறேன் கலங்கித்தான் போகிறேன்... காயங்கள் கண்டேன் பிழைகள் கொண்டேனா  பித்தனாய் கொஞ்சம் சித்தமிழந்து போகிறேன்... உடலோடு வாழ்கிறேன் உயிரை தேடுகிறன் உணர்வுகளை வெறுக்கிறேன் உலகமதில் ஊமையாகிப்போகிறேன்... கண்டது சில கோடி காணாதது பல கோடி நம்பிக்கை கொண்டதால் நான் மட்டும் தெருக் கோடி... அட போடி... போன தெல்லாம் போன பின்னே நாமும் ஒருபிடி சாம்பல் தானடி...         ✍விசித்திரக்கவி 

ஏனடி மறந்தாய்

Image
நெஞ்சம் மறப்பதில்லை நினைவுகள் அழிவதில்லை கனவுகள் கலைவதில்லை அலைகள் ஓய்வதில்லை அவள் மட்டும் என்னை நினைப்பதே இல்லை... காதல் தந்தாள் கற்பனைகள் தந்தாள்... ஏனோ என்னை தனியே விட்டுவிட்டாள்... தீயிலே வாடுகிறேன் தீவாய் போகிறேன்... வார்த்தை ஒன்றை வாய்திறந்து சொல்லிவிடு என்னையும் கொஞ்சம் நீ வாழவிடு...                  ✍விசித்திரக்கவி

தேடுகிறேன்...

Image
என்னை நானே இழந்து தேடுகிறேன்... எப்படி இழந்தேன் யாருக்காக இழந்தேன்... எதற்காக இழந்தேன்-என்பதை அறிந்தவர்கள் அறிந்த பின்னும் அகந்தையில் பேசுகையில்-நான்  அர்த்தமற்று போகிறேன்... அந்த நேரமே அடிவயிற்றில் ஆயிரம் இடி விழுந்தாற்போல் அதனை வலி... எப்படி சொல்வேன் எனக்கும் மனசுண்டு என்பதை...

வருகிறேன்...

Image
வருகிறேன்...  அனைவருக்கும் வருகிறேன்...  வருகிறேன் என்றால்  வருகிறேன் என்பதல்ல,  இனி வரவேமாட்டேன்  என்பதே பொருள்...  அங்கே பாருங்கள்...  ஓர் அழகிய தேர் தயாராகிறது...  பச்சை மூங்கிலும்  பச்சை ஓலையும்   சேர்த்து பின்னிய  தேர் எனக்காக  காத்திருக்கிறது...  இதுவரை சூடாத  பல மலர் மாலைகள்,  என் மார்பின் மேல்  மலைகளாக குவிகிறது...  இதுதான் என்  வாழ்விற்க்கு என்  வாழ்க்கை தந்த வெகுமதியா...  இங்கு பாருங்களேன்...  ஒரு அதிசயம் நிகழ்கிறது...  என்னை சுற்றி  ஓர் வட்டமேசை மாநாடு...  தம்பி சொன்னான்  திண்ணை எனக்குத்தான்...  அண்ணன் புலம்புகிறான்  அந்த புளியமரமும்   எனக்குத்தான் என்று...  தங்கை கேட்கிறாள்  இவன் என்ன செய்தான் நான் செய்ய...   பாவம் அவளுக்கு தெரியாது  என்னால் முடிந்ததை செய்தேனென்று...  மகனும் மகளும்  கைகள் பற்றி கதறுகையில்  என் பதறாத  இதயம் கொஞ்சம்  பதறி போகிறது...  மனைவி மாரடித்...

இறைவா நீ வா...

Image
இறைவா நீ  இருக்கிறாயா...?  நீயே தான்  இறைவா இருக்கிறாயா...?  அங்கே என்ன  தேடுகிறாய்...  இன்னும் ஏதேனும்  புதிய சோதனை இருக்கிறதா...?  அந்த சோதனையில்  தரத்தில் இன்னும் பாவமா  போதும் போதும்...  இதோ  பார்  குப்பை தொட்டியில்  குழந்தையின் குரல் கேட்கிறதா உனக்கு... கண்கள்  இருக்கிறதா உனக்கு...  அப்படியே இருந்தும்  கருவறைக் குள்ளே  கற்புகள் சூறையாடப்படுவதை  கண் கொட்டாமல்  ரசிக்கிறாயோ...  ஊருக்கே  உதவியவன்  ஊருக்குள் ஆண்டியாக ஆகலாமா...  கொடுத்து சிவந்த கரங்கள்  சீல் வடியலாமா...  பள்ளி அறையில்  பிஞ்சுகளை மஞ்சமிட வைத்து  மதயானை போல்  மண்மேலே திரிவது நியாயமா... உழவனே ஒருபிடி  சோத்துக்கு சகலமா...  செத்து செத்து  அவன் சரிந்து போகலாமா...  தவறு செய்தவன்  தப்பிக்கிறான் அதை  தட்டி கேட்டவன்  தரமாக தண்டிக்கப்படுகிறான்...  நாக் கெல்லாம்  கொடும் நாகங்களாக மாறி  நெஞ்சத்தில் நஞ்சினை  கக்கிகக்கி நொந்ததை  காணலையோ நீ...  ஈர மண்ணிலே  இன்னும் ஏனடா  இடி மேல் இடி  விழ காரணம்...  பத்தினியோ பைத்தியம் போல்  பத்திய மிருந்தும்  பாழாய் போன  உலகம் வேசி பட்டம் கட்டுவதோ...  உனை அழைத்து  அழைத்து அழுதது போதும்...  உன் தொழில் ம...

ஓர் கணவனின் தவிப்பு

Image
அன்றொரு நாள்  அதிகாலை பொழுது  தலையணை அருகே  அழகாக சிணுங்கியது...  அவளின் அழைப்பை  ஏற்ற என்கைபேசி...  பக்கத்தில் இருந்தும்  பார்க்காமல் தேடினேன்...  கண்விழித்து கண்டேன்  என்னவளின் அன்பு  முகத்தில் புன்னகையின்  புதுபுது அர்த்தங்கள்...  தொடுதிரை தொட்டு  கொஞ்சம் கரகரத்த  குரலில் ஹலோ...  மீண்டும் ஹலோ...  எதிர் முனையில்  மாபெரும் மௌனம்  சிறுது  நேரம்   என் குரல்  மட்டுமே ஒலிபரப்பு... பதில் ஒன்றும் இல்லை...  படுத்திருந்தவன் எழுந்தேன்  தூக்கமதை தொலைத்தேன்  கனவுகள் கலைந்தது  துக்கம் தொண்டையை அடைத்தது...  கைகள் நடுங்கியது  மனதுக்குள் ஏதோ  ஒரு பெரும்  பாரம் கூடிக்கொண்டது...  ஒவ்வொரு அணுவும்  ஓராயிரம் எரிமலையாய்  என்னுள் எக்காளமிட்டு  வெடித்துச்  சிதறியது...  சேவலின் சத்தம்  சங்கு சத்தமாய் சூன்னியமானது... அவளையே சுற்றுது  என் நினைவுகள்...  அது ஏனோ  ஏனோ அது  என் மனம் மட்டும்  துடியாய் துடிக்கு...

சுமைதாங்கி

Image
உன் கண்ணாடி பார்வையில்  என் இதயம் உருபட்ட  காயங்கள் சிலகோடி...  தேனீகள் கட்டும் கூட்டில்  உன் கள்ள பார்வைபட்டு  கொப்பளித்த கொப்பளங்கள் பலகோடி...  உடல் இட்ட முட்டை  ஈட்டி பார்வை முட்டி  அந்தரத்தில் சமைத்த மாயமென்ன...  நரம்பின் நாளங்களில் ரத்தமில்லை  ஆழ் கடலில் அமைதியில்லை  எங்கும் எதிலும் நினைவில்லை...  சொல்லும் சொல்லில் பொருளில்லை செல்லும் வழியில் நீயில்லை -அதை  சொல்லும் நிலையில் நானில்லை...  நீல மேகத்தில் நிலவில்லை  எரியும் தீயில் அனலில்லை  உடலில் உயிர் இல்லை  உணர்வில் உன்னத மில்லை...  வசைப்பாடிய வார்த்தை கேட்டு  வானவில்லில் ஏழு நிறமில்லை...  இனி என்றும் உனை  ஏற்கும் ஏகாந்தத்தில் யானில்லை...  உன்னால் எதிர் வரும்  என்காலம் சுமைதாங்கியாக மாறட்டும்... 

அவளது நினைவுகள்

Image
மழை நீரில்  நீந்திச் சொல்லும்  காகித கப்பல் -போல்  இனியவளின் நினைவுகள்...  இனியேனும்  கரை சேருமோ...  இல்லை சாகரத்தில்  தீவாய் தனியாய் திரியுமோ... 

இவள் இனி கண்ணீருக்கே தத்துப்பிள்ளை...

Image
கண்களால்  காதல்  சொல்லி  காதுகள்  இனிக்க  இனிக்க  கதை  பேசியவளோ...  கணவனாகும்  முன்னே  கார்கால  மேகம்  போல்  கண்ணீர்  சிந்தி  போகுதம்மா..  கனவுகளை  கொடுத்து  கண்களை  களவாடியவளோ...  கருங்கூ ந்தலில்  பூச்சூடி  கண்டாங்கி  சீலைகட்டி...  கண்கவரும்   ஓவியமொன்னு  கலைந்து  போகுதம்மா...  வரம்   கொடுத்தச்  சாமி   ஒன்னு...  எனக்கு  வரம்  கொடுத்தச்  சாமி  ஒன்னு  எந்தன்  வாசற்படி  வாரமா  தான்  போகுதம்மா...  எந்தன்  காதல்செடி  பூபூக்கும்  முன்னே  மாற்றான்  வீட்டு  மல்லிகையா  மணந்து  மனசு  நொந்து  போகுதம்மா...  சாதி  சனமெல்லாம்  ஒன்னு   சேந்து  ஒன்னான  மனச  ரெண்டாக்கி  அதுல  ஒன்ன  புதைச்சு  புது  வீட்டுக்கு  கூட்டி  போகுதம்மா...  கை  புடுச்சவனோ...

தீயாய் தென்றல்

Image
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து எனும் மூச்சில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ... உங்கள் கருத்துகள் மூலம் உயிர் கொடுங்கள்... தீயாய் தென்றல்   என்னவனே ... தென்றல்  வந்து  தீண்டி  தீண்டி  தினம்  தினம்  -நானும்  தீயில்  பாய்கிறேன்...  தேடித்  தேடி  தேய்ந்து  தொலைக்கிறேன் தீவாய்  நானும்  -உன்  நினைவில்  போகிறேன்... சாரலோடு  சண்டை  போட்டு  புயலோடு  புல்லாங்குழல்  -கொண்டு  பொழுதெல்லாம்  பூவே  உன்னோடு  புலம்புகிறேன்... புன்னகை  யெல்லாம்  நீ  பறிக்க-  நிழலாய்  நானும்  சாய்ந்து  சாகிறேன்...  காற்றோடு  கரைந்து  தீயினை  தீண்கிறேன் நீரிலே  நடந்து  நிலத்திலே  நீந்துகிறேன்...  நான்  இல்லாமல் நீயாய்  தவிக்கிறேன்...  கனவோடு  காய்ந்து  நிஜத்தினிலே  நனைகிறேன்...  காகிதத்தோடு  கனைத்து  காலத்தோடு  கை கோர்க்கிறேன் கண்ணே  உனை-காண  காதலோட...

காதலனின் காத்திருப்பு...

வானவில்  போல  வாழ்ந்து  போனவளின்  வார்த்தைகளை  வண்ண வண்ண  மைகளால்  வரிசையாக  கோர்த்தேன்  வரிகளானது...  வரிகளோடு  கொஞ்சம்  வர்ணனைகள்  கூட்டி வர்ணனைகளுக்  கிடையே  வற்றாத  நினைவுகளின்  வலியை  கொட்டினேன் கவிதைகள்  ஆனது...  வாசித்தவர்  எல்லாம்  வாழ்த்துக்களை  வழங்கி  வாழ்த்திச்  செல்ல - நானோ  வார்த்தைகள்   யின்றி...  வசந்தத்தின்  வசந்த  மகள்  வருவாளோ  என்று  வாசற்படி  ஓரமாய்  வாயடைத்து  காத்திருக்கிறேன்  வழியும்  கண்ணீரோடு...                      என்றும்  கற்பனையின் விளிம்பில்                                         ❤விசித்திரக்கவி