Posts

Showing posts from May, 2021

மாயங்கள் சொல்லும் மர்மங்கள்

Image
காலம் நேரம் பார்த்தே காதல் மழை பொழிந்திடுமா...? அலைகடல் மோதி கரையென்ன கரைந்திடுமா...! காற்றடித்து நிழல் பறந்திடுமா...! கருமேகம் அணைத்து நிலவென்ன மயங்கிடுமா...? கொஞ்சம் மறைந்திடுமா...! கனவு சொல்லி நினைவு வந்ததா...? நினைவு சொல்லி - உன் கனவு வந்ததா...! பூவைக் கேட்டு வண்டு வந்ததா...! வண்டைக் கேட்டு - இல்லை பூப் பூத்ததா..? மின்னல் அடித்த பின்னே இடி இடிப்பது, நியாயம் தானே-இது இயல்பு தானே... உடல்பட்ட துன்பம் மனது அறியுமே..! மனதுபட்ட துன்பம் கண்கள் மட்டும் சொல்லுமே...! களவு போன இதயம் கேட்குமா...? இதயம் சொல்லி மூளையென்ன கட்டிப்போடுமா...? அன்பு வந்த பின்னே, ஆசை வருவது குற்றமா.....?              ✍விசித்திரக்கவி 

என் அதிகாலைப் பொழுது...

Image
அதிகாலைப் பொழுதெல்லாம் அவள் முகம் பார்த்தே, அழகாய் என்னுள் விடிகிறது... வெண் நிலவு மறைந்த பின்னே பெண் நிலவு இன்னும் மயங்குது... மயக்கும் கண்கள் மயங்கிக் கிடக்குது மத்தாப்பாய் உதடுகள் அதிகம் சிரிக்குது... எதையோ சொல்லுது ஏக்கங்களை கூட்டுது ஆசையாய் கிள்ள கன்னங்கள் பூக்குது... வானவில் ரெண்டும் வாடி கிடக்குது அதை கருமேகம் சூழ்ந்து கிடக்குது... இராத்திரி நேரத்து இரகசியங்கள் கொஞ்சம் செல்லமாய் எட்டிப்பார்க்குது மீண்டும் இதயத்தை மெல்லமாய் தட்டிப்பார்க்குது... அன்னம் அசையாமல் அசந்து அழகு மயிலென அடி நெஞ்சில் மத்தளம் கொட்டுது...           ✍விசித்திரக்கவி 

காதல் வந்த பின்னே...

Image
காதல் வந்து தொட்டப் பின்னே நெஞ்சம் தாங்குமா கொஞ்சம் தூங்குமா...! இரவு வந்த பின்னே நிலவு நீங்குமா நீரில்லாமல் மீன் நித்தம் நீந்துமா...! காதல் காற்றுப்பட்டு கவிதைப் பூக்குதே உன் வாடைத்  தொட்டுத் தூக்குதே...! அழகுப் பார்த்து ஆசைத் தாக்குதே அது ஆழம் பார்த்துத் தள்ளுதே...! ஆசை முத்தம் அஞ்சாறு கேக்குதே அச்சம் வந்து மிரட்டிப் போகுதே...! இந்த இரவெல்லாம் வேர்த்துப் போகுதே என் கனவெல்லாம் நீர்த்துப் போகுதே...!                ✍விசித்திரக்கவி

சந்தேகம் வேண்டாமடி...

Image
கண்கள் ரெண்டும் கருப்பு வெள்ளை ஓவியமா...? காதல்மொழி பேசும்-என் கற்பனைக் காவியமா...! எண்ணத்திரையில் தோன்றும் வண்ணத்திரை பாவையம்மா, நீ பல்லவ நாட்டின் பதுமையம்மா...! தேன்துளி கொண்டு தேவதை நீயென வரைந்தானா...! தித்திக்கும் தமிழ் கொண்டு செவ்விதழ் படைத்தானா...! செந்நிறப்பூ கண்டு செவ்வாழை தண்டென, செந்தமிழ் நாட்டு பெண்ணுக்கு உரு கொடுத்தானா...! பூங்காற்றை பூவென பறித்து நிலவென உருக்கி, உயிர் கொடுத்தானா...! பூச்சரமாய் தொட்டுத்தானா...! தேவதைகளின் நகலென நகம் வைத்தானோ...! தேகம் எல்லாம் சந்தனத்தால் இளைத்தானோ...! இளையவளே கண்ட நாள்முதல் கனவுகளில், தொட்டுத்தொட்டு பார்க்கிறேன்...! தூக்கத்தினை தொலைக்கிறேன்...! சந்தேகம் வேண்டாமடி சந்திரனும் சொல்வாண்டி...! சாட்சியென கொள்ளடி சம்மதமென கொஞ்சம் சொல்லடி...!                    ✍விசித்திரக்கவி

நெஞ்சோரம் கொஞ்சம் கலவரம் கூட்டடி...!

Image
சித்திரங்கள் பார்க்குதடி சிலையெல்லாம் வேர்க்குதடி...! சிணுங்கி சிணுங்கி நீ சிரித்தால், சித்திரங்கள் பாவமடி... பட்டு உடையில் சிட்டென நீ வந்தால், சட்டென உடையும் என் இதயமடி...! சந்தனமும் குங்குமமும் சங்கீதம் பாடுதடி...! சித்திரை நிலவாய் தேகம் மின்னுதடி...! வளையளும் கொலுசும் என்னடி பேசுது...? உனை கண்டால்-என்  கண்களுமிங்கே கூசுது...! மல்லிகை பூவும் மனசுக்குள்ளே பாடுதோ...! மானே நீ தொட்டதால்,சிலிர்த்ததோ...! தோகை மயிலாய் ஆடுகிறேன்,பாடுகிறேன்...! பாவை நீயும் பார்த்திடடி  நெஞ்சோரம் கொஞ்சம் கலவரம் கூட்டடி...!             ✍விசித்திரக்கவி 

விசித்திர வரிகளின் சொந்தக்காரி

Image
  விசித்திர வரிகளுக்கு இவள் சொந்தக்காரி எனையாளும் மாயங்கள் தெரிந்த மந்திரக்காரி... காலமெல்லாம் என் காற்றுப் பைக்குள் கடிகார முள்ளாய் சுற்றும் தந்திரக்காரி... மூக்கு வியர்க்கும் முன் கோபக்காரி மூச்சென துடிக்கும் முல்லைபூ வாசக்காரி  நிழலென வருவாள் நிம்மதி தருவாள் நித்தம் அணைப்பாள் அனைத்தும் ஆவாள்... ஆக்கத்தின் ஆதாரமாய் -என்  ஏக்கத்தின் அச்சாரமாய் என்னுள் வாழ்கிறாள்...                  ✍விசித்திரக்கவி 

வரிகளாய் வாழ்வேனா...

Image
  தேனென இன்னிக்கும் தேவியின் கன்னங்கள் தெவிட்டாத இன்பத்தின் இதயச் சின்னங்கள்...! அல்லி இதழின் அதிசயப் பிளவில் முல்லை சிரிப்பென  முரசாய் சாட்டுகிறாள்...! நெஞ்சோரம் வேதனை கூட்டுகிறாள்-என்  விழியோரம் விளம்பரம் காட்டுகிறாள்...! விண்ணோடு வில்கொண்டு என்னோடு சமர் செய்கிறாள்...! மையுண்ட மலர்விழியால்  மண்ணோடு சாய்க்கிறாள் மடியோடு அணைத்து மனதிலே மத்தளம் கொட்டுகிறாள்...! காற்றிலே அசையும் நாணல் இடைகாட்டி நாணத்தால் நெளிகிறாள் கருநிற குழல் போர்த்தி மோகத் தீயாய் சுடுகிறாள்...! சகியின் சபரக் கண்களால் கற்பனைச் சாகரத்தில் ஆழ்த்திப் போகிறாள்...! பேதை நானும் ,  காகிதம் கொண்டு கொஞ்சம் நீந்திடுவேனா...! வரிகளாய் கொஞ்சம் வாழ்ந்திடுவேனா...!                ✍விசித்திரக்கவி 

சொன்னது அவள் தான்...

Image
  முற்பொழுதும் உன் கற்பனையிலே முழுமதியாய் வாழ்கிறேன்... மூச்சுக்கு மூச்சாய் உன் நினைவுகளையே சுவாசிக்கிறேன்... நித்தம் தேடுகிறேன் நிம்மதியிழந்து வாடுகிறேன்... மாங்குயில் நான் மாமர கிளையோரம் மயங்குகிறேன்... உயிரோடு உருவமிழந்து உன்னைத்தான் தேடுகிறேன்... அருவமாய் உன்னருகில்  உணர்வாய் உறைகிறேன்... அறியாமல் போகாதே அடியோடுயெனை சாய்க்காதே... அந்தி நேரத்தில் -நீயும்  அகிம்சையினை கூட்டாதே... ஆகாயத்தில் அலைகிறேன் கள்வனே உனை அழைக்கிறேன்... கண்கட்டி வித்தை போதுமடா  கண்ணெதிரே வாழ்ந்திட, என் வாசல் தேடி வந்திடு...                      ✍விசித்திரக்கவி 

சிந்தை தெளிந்தேன்...

Image
கலையான உனை  சிலையெனக் கண்டேன்...! சிலநேரம் கண்களும்  கவிபாடக் கண்டேன்...! காற்றில் நிழல் அசையக் கண்டேன்...! அப்போதுதான் நான் கொஞ்சமுயிர் கொண்டேன்...! அசைந்தது நிழலா  ஐந்தடி சிலையா...! அதிசயம் கண்டேன் ஆகாயத்தில் பறந்தேன்...! இதயம் இழந்தேன் காட்சிகளில் விழுந்தேன்...! கற்பனையில் தவழ்ந்தேன் காற்றினில் கலந்தேன்...! எண்ணம் தொலைத்தேன் உன்னில் திழைத்தேன், எழுத்தினை கூட்டி காகிதத்தில் கழித்தேன்...! அத்தனையும் பிழையென ஆத்திரத்தில் கிழித்தேன்...! இரத்தம் பிழிந்து, சித்திரமென சிந்தை தெளிந்தேன்...              ✍️விசித்திரக்கவி 

அல்லி கண்களால் கிள்ளி பார்க்கிறாள்...

Image
ஆனந்தம் ஆனந்தம் அதிகாலையிலே பேரானந்தம்... கொஞ்சம் துள்ளப்பாக்குது நெஞ்சத்தை மெல்லப்பாக்குது... மெல்லமாய் வந்து போகுது செல்லமாய் எனை பாக்குது, அந்தி வானமாய்-அது அழகுதனை கூட்டுது... அதிசய நிலவாய் ஆலோலாம் பாடுது... அட! எத்தனையோ இரவுகளில் இந்த இரவு இத்தனை சுகமா... ஓவியப் பெண்ணாய் ஒய்யாரமாய் வருகிறாள், சிங்கார மில்லாமல் சில்லென பார்க்கிறாள்... சின்னவள் செவ்வந்தி நிறத்தில் செவ்வாழைத் தண்டென அல்லி கண்களால் கிள்ளி பார்க்கிறாள்... காஞ்சி பட்டெடுத்து கண்ணுக்கு மையிட்டு வளவிக்கு செய்தி சொல்லி வானத்து நிலவென வைபோகம் வருகிறாள்... அத்தனை அழகும் இத்தனை நாள் காணாலையே, எத்தனை நாள் -இனி நான் இப்படியே... அம்மாடியோய்...! மஞ்ச தாலி தஞ்சம் கண்டாச்சி அம்மியும் அருந்ததியும் ஆசைதீர பார்த்தாச்சி... கன்னி மொட்டு எனை முட்டும் நேரமிது நான் மட்டும் பறக்கும் நேரமது...! கிட்டபோய் தொட்டு பார்க்கும் நேரமது சட்டென முழித்தேன் அத்தனையும் கனவிது...!               -விசித்திரக்கவி 

தொலைதூர வானம்

Image
  தொலைதூர வானம் தொலைவாக நீயும், தொலையாத நானும் நெடுந்தூர பயணம்... நட்டநடு ராத்திரியில் நந்தவன தோட்டத்தில், எத்தனையோ இன்பங்கள் -இன்று அத்தனையும் துன்பங்கள்... எட்டாத வானவில்லுக்கு ஏழு நிறமெதற்க்கு...? வந்து போகும் உன் நினைவிற்க்கு வாசற்படி எதற்கு...? வாடும் மலரக்கு வாசம் எதற்கு...? தேயும் நிலவிற்க்கு வளர்பிறை தான் எதற்கு...? ஓடும் நதிக்கு ஓய்விருக்கா...! ஓடாத கடலுக்கு நிலையென நீர்யிருக்கா...! உனக்கென நானிருக்க, எனக்கென யாருயிருக்கா...? வந்து நீயும் போன பின்னே என் நியாபகமிருக்கா...! அலையென மோதும் உன்னினைவின் மீதெனக்கு கொஞ்சம் கிறுக்கா...! என் மீதும் உனக்கும் வெறுப்பா...!              -விசித்திரக்கவி 

கண் மூடும் வேளையா இதுகண்களையே மூடும் வேளையா...

Image
கண் மூடும் வேளையா இது கண்களையே மூடும் வேளையா... கடவுளின் வேலையா இல்லை மனிதனின் பிழையா... தனி அறைக்குள் தணியாத தாகம் தனியே இருப்பதால் விடியும் மோகம்... முத்தி பெறும் சித்தி வரும் சக்தி தரும்-அதை  சிவமே தரும்... சிக்கி தவிக்கும் விக்கியே விழுக்கும் நாக்குகளும் நடமாடும்-நாடே நாளும் பாடையில் போகும்... போதுமடா மனிதா போதுமடா பொறுமைகொள் தனியே திறன்கொள் தரணியே உனதடா... தரித்திரம் போகட்டும் சரித்திரம் மாறட்டும் விசித்திரம் விலகட்டும் நலம் நச்சத்திரமாய் மின்னட்டும்... காற்றிலே காத்திரு காற்றை காத்திரு காலம் மாறும் கடமைகள் தொடரும்...                     என்றும் தமிழோடு                      -விசித்திரக்கவி 

காவியமும் ஓவியமும்

Image
காவியமும் ஓவியமும் குழைத்து குழைத்து செய்தானோ சொல்லும் பொருளுமென செந்தமிழிலே உனை படைத்தானோ... கண்கள் ரெண்டும் இரட்டைக் காப்பியமா...? கடைவிழியினிலே மடையென வழிந்து இளமையினை வாட்டுதே... புன்னகையாலே பூக்கிறாய் பூ லோகம்தான் தங்கிட்டுமா...! இவள் பதுமையென புலோகம் தான் ஏற்றிட்டுமா...? தாரகையேயுன் இதழ் கனியிலே இரட்டை வரிகளா...!  ஆழ்ந்தது பார்த்தால் இன்பத்தின் சுவைகளா... விழிகளுக்குள்ளே வண்டாடுதோ எதை கண்டு திண்டாடுதோ...! கண் மணிக்குள்ளே காப்பியங்கள் பல நின்றாடுதோ...! தென்னாட்டு நிலவே...! தங்க நிழலென உன்னில்  தங்கிக் கொள்ள தஞ்சமென புகுந்தேன்... தாங்கி கொள்ளடி கொஞ்சம் ஏந்திக் கொள்ளடி, தவழ்ந்திட்டுவேன், வீழ்ந்திடுவேன் மீண்டும் உன்னிலே ஆழ்ந்திடுவேன்...                  -விசித்திரக்கவி 

கற்பனை களவு போனது

Image
                              என்றும் தமிழோடு                       -விசித்திரக்கவி  கற்பனைகள் களவு போனது எழுதாக்கவிதைகள் ஏக்கம் கொள்ளுது, உவமைகளை தொலைத்து விட்டேன்  ஊமையென கொஞ்சம் ஆகிவிட்டேன்…   நெஞ்சம் இங்கே தூங்குது  தஞ்சமென எங்கோ போகுது,  நித்தம் பஞ்சமென பார்க்குது  நித்திரையில் சித்திரையாய் வேகுது… சித்தமெல்லாம் சிதைந்து போகுது  சிந்தனையிலே சிவந்து போகுது,  புருவங்கள் ரெண்டும் புலம்பி  புழுதிக்காற்றில் புழுவென துடிக்குது… காற்றுக்கும் கைகள் இல்லை  கனவுகளுக்கும் எல்லை இல்லை, கதைப்பார் யாரும் இல்லை  கதவடைப்பார் யார் இங்கோ…? வார்த்தைகள் வற்றிப் போய்  முதுகோடொற்றிய வயிற்றைப் பார்த்து  வாயடைத்து தூற்றி போகுது-இனி  மிச்சமென யெதுமீறப் போகுது… ஆண்டவன் பிழையா…? ஆள்கிறவன் பிழையா…?  ஆறறிவுதான் அகிலத்தின் பிழையா…?-இது  அறிந்தவனின் பிழையோ…  இதை யானும் ...

யுத்தம் செய்கிறாள்

Image
நான் கொஞ்சம்  கொஞ்சி மிஞ்சினால்...  சத்தங்கள் இன்றி  முத்தங்களால் என்னுடன்  யுத்தம் செய்கிறாள்... முழுமதி நிலவாய்  முற்கொண்ட ரோஜாவாய்  ஆகாயம் போல் விடிய விடிய  மேனிதனில் உலாவுகிறாள்... விழா கால விடியல் போல்  விடிய விடிய  விழாவை காட்டி தேவதை அவளோ  திருவிழா ஆகிறாள்...  திருவிழாவை ரசிக்க  வந்த என்னை  வசீகர பார்வையால்  திருட தூண்டுகிறாள்...  இவள்  கவிதையின்  மகளா இல்லை  ரவி வர்மனின்  ரகசிய ஓவியமா... ராந்தால் ஒளியில்  ரகசியங்களை கலைத்து  ராட்சசி அவள்  ரசனையோடு ரசிக்கிறாள்...  விண்மீனையும் மிஞ்சும்  பெண் தாரகையின்  கண்களோ இங்கு மின்மினிகள்...  கதையாய் கதை கேட்டும் பூங்கற்றே தீண்டும் தென்றலெல்லாம் -என்  ரதியின் கட்டுப்பாடே...  விரல்களால் புதியதொரு  தளம் போட்டு  அகிம்சையாக இம்சிக்கிக்கிறாள்  என் இம்சை ராணி...            🌹விசித்திரக்கவி  

மனிதனாய் பிறந்து விட்டேன்...

Image
கண்களை தொலைத்து விட்டேன், இமைகளை திறந்து  உறக்கத்தினை கனவுகளில் கொஞ்சம் தேடுகிறேன்... உரக்கச் சொல்கிறேன், உருமாறி உருகுழைத்து வேதனையிலே வாழ்கிறேன் புழுவாய் நெளிகிறேன்... நெஞ்சமெல்லாம் வேகுது பஞ்சாயது எரியுது பழிகளை சுமந்து பக்குவமாயது பார்க்குது... பாலென கண்டதெல்லாமெனை பாதாளத்தில் தள்ளுது பூவென கண்டதெல்லாம் பூநாகமாய் சீருது... மனிதனாய் பிறந்து விட்டேன். மன்னித்தே கொஞ்சம் மானமிழந்து விட்டேன்-இதையே மறுபடியும் சகிப்பேனா... கல்லெரிந்த கண்ணாடிப் போல சொல்லெரிந்து சிதறி கிடக்கிறேன் சிக்கித் தவிக்கிறேன் சிந்தனைகளை இழக்கிறேன்... வாழவே நினைக்கிறேன் வார்த்தைகளில் இறக்கிறேன் வெறுமையாய் உணர்கிறேன் வெற்றிடமாய் கிடக்கிறேன்...                  ✍விசித்திரக்கவி 

உழைத்து உழைத்தே உருகுலைந்து போகிறோம்...

Image
உழைத்து உழைத்தே உருகுலைந்து போகிறோம் ஒருபிடி சோத்துக்கே  ஓயாமல் சுமக்கிறோம்... அன்று முதல் இன்று வரை உழைத்தவனே ஓடாய் உடைந்து போகிறோம்... முதலாளி தத்துவம் முதலைபோல் ஆகுது... வரிகள் ஏறுது-அது வாய்க்கால் வரை போகுது ... உழவனே உழவுக்கு பயந்து ஓடுகிறன் நடப்பதையெண்ணி நாளும் வேதனையிலே வாழ்கிறான்... அரசு சட்டமெல்லாம் தரிசாய் போகுது  உழைத்தவன் குடும்பத்தில் தாலி மட்டுமே எஞ்சுது...        ✍விசித்திரக்கவி 

நீலவானிலே நீயும்,நிலவிலே குடிப்புகுந்தாயா...?

Image
உன் நினைவுகளெல்லாம் கனவுகளாக உருவெடுத்து நித்திரை நேரத்திலெனை நித்தமும் வாட்டுதடி... கண்ணாடி பிம்பமாய் கண்ணெதிரே கலையுதடி... கானல் நீராயது, கண்ணுக்குள் பாயுதடி... கண்ணீரும் செந்நீராய் கன்னத்தில் வழியுதடி... நெஞ்சம் வலியிலே, கொஞ்சம் கதறுதடி... காதல் மொழி பேசும் முன்னே, என்னுள் கவிதை-மொழி  கொஞ்சம் பேசினாய்... காதல் மொழி பேசிய பின்னே, மௌன மொழி -ஏனடி..? கொஞ்சம் சொல்லடி... நெஞ்சில் நிலைத்தவளே, நித்தமெனை விழியாலே நெஞ்சோடு சாய்த்தவளே -நீயும் நித்திரை கொண்டாயா...? நீலவானிலே நீயும், நிலவிலே குடிப்புகுந்தாயா...? காற்றாய் மாறி காதோடு மெல்லமாய் பேசடி...! காலங்கள் பல கடந்தே காத்திருக்கிறேன்... கண்ணோடு உன் நினைவுகளை மட்டுமே சேர்த்திருக்கிறேன்... என் வீட்டு -ராணியே எனக்கு முன்னே, எனைவிட்டு போனதென்ன...? உனக்கு மட்டும் சொர்க்க மென்ன...? ஏனடி போனாய்...? எங்கே போனாய்...? இங்கே, தவிக்கிறேன் நானடி கொஞ்சம் பாரடி...!            ✍️விசித்திரக்கவி              

ஓர் நாள் ஊரடங்கு

Image
ஓர்நாள் ஊரடங்கென்றால் எங்கள் வயிறடங்கிடுமா...? ரோட்டோரா வாழ்க்கையில் ரொட்டித் துண்டாவது கிடைத்திடுமா...? மூன்று வேளையில் ஓர் வேளையாவது இன்று உண்டிடுவோமா-இல்லை பசியிலே உறங்கிடுவோமா...? உழைத்தே உண்கிறோம் உணர்வுகளை துறந்து, சிலநேரம் பசியின் உச்சத்தில் கைகளை ஏந்துகின்றோம்... உரிமைகள் வேண்டாம் உணவாவது வேண்டும் கிடைத்திடுமா...! நாங்களும் பசி மறப்போமா...             ✍️விசித்திரக்கவி