மாயங்கள் சொல்லும் மர்மங்கள்
காலம் நேரம் பார்த்தே காதல் மழை பொழிந்திடுமா...? அலைகடல் மோதி கரையென்ன கரைந்திடுமா...! காற்றடித்து நிழல் பறந்திடுமா...! கருமேகம் அணைத்து நிலவென்ன மயங்கிடுமா...? கொஞ்சம் மறைந்திடுமா...! கனவு சொல்லி நினைவு வந்ததா...? நினைவு சொல்லி - உன் கனவு வந்ததா...! பூவைக் கேட்டு வண்டு வந்ததா...! வண்டைக் கேட்டு - இல்லை பூப் பூத்ததா..? மின்னல் அடித்த பின்னே இடி இடிப்பது, நியாயம் தானே-இது இயல்பு தானே... உடல்பட்ட துன்பம் மனது அறியுமே..! மனதுபட்ட துன்பம் கண்கள் மட்டும் சொல்லுமே...! களவு போன இதயம் கேட்குமா...? இதயம் சொல்லி மூளையென்ன கட்டிப்போடுமா...? அன்பு வந்த பின்னே, ஆசை வருவது குற்றமா.....? ✍விசித்திரக்கவி