Posts

Showing posts with the label காதல்

கள்ளியாய் வில்லியாய் சாகசங்கள் போதுமடி...

Image
வெண்சங்கு நீரெடுத்து விண்மீனை பிரித்தெடுத்து தேன்கலந்து கொஞ்சம் தேகத்துக்கு உருகொடுத்தானா...! வெண்ணிலவை விளக்காய் வைத்து அங்கமெல்லாம் தங்கமென அளந்து அளந்து அசைவு கொடுத்தானா...! இசைக்கு இசைவாய் இடைக்கு கொஞ்சம் இசைவு இசைந்து இன்னிசை மீட்டுக்கிறாய்... கண்களால் மத்தளம் கொட்டுக்கிறாய், காற்றைத் தொட்டு களவரம் செய்து கைதியாய் சிறையிலடைக்கிறாய்... சின்னச் சின்ன குறும்புகள் செய்கிறாய் செவ்வானத்தில் செம்மீனை ஏனடி தேடுகிறாய்...! செய்வதெல்லாம் செவ்வனே செய்து வைக்கிறாய், செவ்வந்தி பூக்களுக்குள் சண்டையினை மூட்டுகிறாய்...! புல்லாங்குழலாய் உன் குரல் கேட்டு பூக்கள் எல்லாம் பூப்படைந்து பூக்கிறது....! காய்க்காமலே அது  கனி ஆகிறது... கள்ளியாய் வில்லியாய் சாகசங்கள் போதுமடி என் சாதாரண கண்கள் சத்தியம் தாங்காது...                   விசித்திரக்கவி 

யுத்தம் செய்கிறாள்

Image
நான் கொஞ்சம்  கொஞ்சி மிஞ்சினால்...  சத்தங்கள் இன்றி  முத்தங்களால் என்னுடன்  யுத்தம் செய்கிறாள்... முழுமதி நிலவாய்  முற்கொண்ட ரோஜாவாய்  ஆகாயம் போல் விடிய விடிய  மேனிதனில் உலாவுகிறாள்... விழா கால விடியல் போல்  விடிய விடிய  விழாவை காட்டி தேவதை அவளோ  திருவிழா ஆகிறாள்...  திருவிழாவை ரசிக்க  வந்த என்னை  வசீகர பார்வையால்  திருட தூண்டுகிறாள்...  இவள்  கவிதையின்  மகளா இல்லை  ரவி வர்மனின்  ரகசிய ஓவியமா... ராந்தால் ஒளியில்  ரகசியங்களை கலைத்து  ராட்சசி அவள்  ரசனையோடு ரசிக்கிறாள்...  விண்மீனையும் மிஞ்சும்  பெண் தாரகையின்  கண்களோ இங்கு மின்மினிகள்...  கதையாய் கதை கேட்டும் பூங்கற்றே தீண்டும் தென்றலெல்லாம் -என்  ரதியின் கட்டுப்பாடே...  விரல்களால் புதியதொரு  தளம் போட்டு  அகிம்சையாக இம்சிக்கிக்கிறாள்  என் இம்சை ராணி...            🌹விசித்திரக்கவி  

தாவணி நிலவே...

Image
                     17/02/21 பாதகத்தி நீயும் -தான் படபடக்கும் நெஞ்சத்தில் படை யெடுத்தாய்... பட்டாகத்தி இல்லாம- உன்  கூர்விழிகாட்டி பாவிநெஞ்சத்தை பதற வைத்தாய்... கரிசல்காட்டு பூவே -உன்  கண்ணிரெண்டில் விழுந்தேன் அங்கேதான் இதயமிழந்தேன்... இரண்டாம் நிலவே -என்  இம்சை ராணியே அகிம்சையாயிம்சை செய்யாதே... வராமல் வருகிறாய் தாராமல் தருகிறாய் தனியே தவிக்கிறேன்... கனவுகளிலே மிதக்கிறேன் நிஜத்தினிலே வாழ்கிறேன் நித்தமுனை நினைக்கிறேன்... உன்னைத்தான் சுவாசிக்கிறேன் கூண்டுக்கிளியாய் உன்னுள் அடைபட ஆசைகொள்கிறேன்... தாவணி நிலவே சொட்டும் மழையே குளிரும் அகலே... குட்டி தேவதையே குறும்பு சிரிப்பே வெட்க சரலே... வெப்ப சலனமே வீசிவரும் காற்றே உன்னாலே வாடுகிறேன்... உன் பெயரையே தினம் படுகிறேன் திக்கிழந்து திரிகிறேன்... தீயாய் எரிகிறேன் என்னையே வெறுக்கிறேன் உன்னையே தேடுகிறேன்... அணைக்க வந்திடு ஆகாசம் விட்டு சுவாசம் தந்திடு... அனைத்தும் நீயே ஆகிடு பார்வையின் அர்த்தம்தனை பாவை நீயும் கூறிடு... போதும் போதும் என்னுள் வாழ்ந்திடு புது வார்த்தைகளை சொல்லிடு.....

என் இதயமே

Image
மார்புக் கூட்டுக்குள் மத்தளம் கொட்டுதடி மங்கையுன் விழிகளில் -அது மதிமயங்கி போகுதடி... கனகவள்ளியுனை நினைத்து -என் கனவுகள் நீளுதடி காட்சிகளுக்கு நித்தமது கண்களில் ஏங்குதடி.. வண்ண மயிலே வளமை புயலே வாலிப நிலவே வந்துவிடு வந்துவிடு வரமொன்றை தந்துவிடு...                  ✍️விசித்திரக்கவி

காட்சி தருவாளா...!

Image
                    03/02/21                     ✍விசித்திரக்கவி  கவிதைகள் ஆயிரம் கண்டேன் அங்கேதான் அவளை கண்டேன் மொழிகள் நூறினை தந்தாள்-என் வார்த்தைகளை பறித்துக் கொண்டாள்... அழகே போர்க்களம் போவது -போல் சின்ன நடையே படையாக சிங்கார படையே நடையாக தேவதையாய் பவனி செல்கிறாள்... அவளது சிலிர்த்த தேகத்தால்-எனை  கொஞ்சம் சிறை வைக்கிறாள் சின்னச் சின்ன சிலுங்களில் அதிகம் ஆட்டி வைக்கிறாள்... பால்நிலவாய் பட்டாடை கட்டி-எனை பார்த்துப் பார்த்து சிரிக்கிறாள் பக்குவமாய் பார்த்தே ஈட்டி-பார்வையினை பாதகத்தி குத்தி போகிறாள்... காயம்பட்ட வேகத்தில் பாவப்பட்ட-எனை பவள பல்லக்கில் கடத்துகிறாள் கடத்தியவளே காதல் மொழிபேசி காற்றாடியாய் சுற்ற வைக்கிறாள்... அவளையே சுற்றிச்சுற்றி வருகிறேன் -அவள் கண்பார்த்து பேச முயல்கிறேன்... மான்குட்டி விரல் பட்டால்-நானோ  தோகை மயிலாய் ஆடுகிறேன்... முயல் குட்டியின் முன்னழகில் முழுவதுமாய் மூச்சிழந்து போகிறேன் பின்னழகின்  கூந்தல் வாசம்பட்டே கொஞ்சம் சுவாசம் கொள்கிறேன்... இனி.....

கண்ணாடி காகிதங்களே

Image
அந்திசாயும் நேரத்தில் ஆகாச வெண்ணிலவாய் அழகாய் வலம்வரும் பெண் நிலவோ! சிற்றுடல் தளிர்மேனியில் தங்கநிற தாவணி தைதையென சிங்கார தாளம் போடுதோ! வட்ட நிலா எட்டிப் பார்க்க சுட்டி நிலா சுற்றிப் பார்க்குதோ! மண் ணுலக மந்தரையின் சஞ்சராம் விண் ணுலக வாசிகளின் சங்கடமோ! வாடிப் போன வாடை காற்று வஞ்சியிடை தொட்டு ஆடிப் போகுதோ! கார் குழலியின் காலடி மண்ணெடுக்க கடமை மறந்து காலனவன் வருவானோ! மைவிழி மங்கையின் மாதுளையிதழ் தொட்ட தென்னாட்டு தென்றலது போதையினால் தள்ளாடுதோ! பேதை அவளும் பூங்கோதை யென புலோக மதிலே பூவாசம் வீசுகிறாள்... அந்நிலை கண்டவன் தன்னிலை மறந்து தள்ளாடும் தென்றலது பாவையிடம் சேர மயங்கிய மனமதை மயக்கிய தேவதைக்கு மனமார காதல்மண  மனமடல் அனுப்புகிறேன்... கண்ணாடி காகிதங்களே கண்ட கனவதை கனகவள்ளி கண்ணோடு கச்சிதமாய் கூறுங்கள்...                     ✍️விசித்திரக்கவி

கூடவே வாரேன்

Image
ஆத்து தண்ணி -மேல  ஆலமர நிழலு  அழகா நின்னு  காத்தாற குளிக்குது...  கால் வலிக்க -என்   கவலையோடு காத்திருந்தேன்...  அத்தை மகளோ  அதிசய வெண்நிலவோ...  ஆத்தங்கரை மேல  கழுத்த வளைச்சி  இல்லாத இடுப்புல -நீ  இடையோடு இறுக்க...  செப்பு குடம் -செய்த  புண்ணியம் கண்டு  இல்லாத ஆசையெல்லாம் எங்கிருந்தோ ஓடிவருது...   வளைஞ்சி நெளிஞ்சி -நீ  குணிஞ்சி குடம்  தூக்க ஐயோ-தாங்காதே  என் நெஞ்சம் ...  வெட்டருவா கண்ணால  திட்டாத அயிரமீனு  நாலு அங்கேயே -அண்ணம்  தண்ணியிலாம செத்துப்போகும்...  கண்ணால சாடை  மட்டும் காட்டு  குடத்து தண்ணியா  கூடவே வாரே...                 என்றும் தமிழோடு                       விசித்திரக்கவி 

காதலனே...

Image
ஆசை கள்வனே  அழகிய காதலனே  அகிம்சையாய் அழகிய  இம்சைகள் தந்து  அதிசயிக்கும் வேலையிலே -நானும்  ஆழ்கடலில் ஆடுகிறேன்...  இதோ பார்...  வெண்ணிலா வந்து  வெண்ணை கேட்டு  திண்ணையிலே என்னை  தினம் தினம் பாடுது...  தித்திக்கும் தமிழோ சத்தான  கவிதை தந்து...  திகட்டாத முத்தம்  தாவென கேக்குது...  தென்றல் வந்து  இதமாய் தீண்டி  எனை நித்தமும்  திண்டாட வைக்குது...  ஆறடி கூந்தலிலே  அருவியென விழுந்து  அதிகாலை வரை -இந்த  மல்லிகை மயக்குது...  மாலையிட்ட மன்னவனே  காலமெல்லாம் நீ காவலனே  எனக்கு மட்டும்  தினம்  திருடனே...  சாம நேரத்து  சங்கீதம் கேட்டு  நட்சத்திரங்கள் ஓடிவந்து  எட்டிப் பார்க்குது...  முந்தி கொண்ட  கூரையோ முக்காடு போட்டு முழுசா மூடிக்கிச்சி...  ஆசையெல்லாம் அழகா  தண்ணிமேல பக்குவமா  பத்திக்கிச்சி பக்கத்துல  நீ வந்தணைக்க  நிம்மதியாச்சி...               என்றும் தமிழோடு...

என்னடி கள்ளி ...

Image
ஆத்தாடி  உனை  பாத்தாலே  காத்தாடி  -போல கூத்தாடி  போரேண்டி... கண்ணாடி  முன்னாடி  கண்ணாமூச்சி  நா   ஆடி  கண்ணடிச்சி  நான்  கட்டிலில கிடக்குறண்டி...  கண்ணால  கட்டி  -என்  கண்ணம்  கிள்ளி  காதல்   சொல்ல  கனவுலயாச்சும்  வாயேண்டி...  என்னடி  விழிகள்  அது... இமைகள்   ரெண்டும்  என்னமோ  ரகசியம்  சொல்லி  மின்னுது... என்...  நின்றாடும்  நந்தவனமே...  ஆசைகளின்  அதிசய  களஞ்சியமே...  சொல்லடி  என்  செல்லக் கிறுக்கி  ...                                                                  -என்றும் தமிழோடு                                        ...

கூடல் பொழுதுகள்

Image
கூடல் பொழுதுகள்  உதடுகள்  நான்கும்  ஊஞ்சல்   ஆட  உடல்கள்  ரெண்டும்   உருமாறி  உருகிப்  போகட்டும்...  இமைகள்  எட்டும்  கொஞ்சம்  மூடட்டும்  இரண்டாம்  உலகம்  இன்றே  காணட்டும்...  காற்றும்  கலங்கட்டும் காதலன்  காதலி  தேடி  ஓடி  சிட்டாக  ஒட்டட்டும்...  பட்டுடல்  பட்டுப்-போல்  பின்னட்டும்  தொட்ட  இட  மெல்லாம்  தேனாக  சொட்டட்டும்...  மின்மினி  மட்டும்  மின்னட்டும்   ஆசைகள்  எங்களை  போல  கட்டிலில்  துள்ளட்டும்...                              என்றும்  தமிழோடு                                   @விசித்திரக்கவி...

இராட்சஷி

சஹாராவுக்கும்  நயாகராவுக்கும்  நடுவே   நிறுத்தி  நட்டநடு   ராத்திரியில்  நகத்தினால்  நரம்பினை  வீணை   போல்   மீட்டுகிறாள்...  விண்ணை   முட்டும்  முத்தச்   சத்தத்தில் மொத்தமும்   கொள்ளையடித்து  கொலை   செய்கிறாள்... சஹாராவுக்குள்  நயாகரா   நகர்ந்த பின்னும்   இன்னும்  சுகம்   கூட்டுகிறாள்...  வற்றாத   நயாகராவும்  நாணம்   கொள்ளுமளவுக்கு  கொஞ்சுகிறாள்...  சஹாராவாக   நான்  உரிய   உரிய  செவ்விதழ்  செந்தேனை  சுரக்கிறாள்...  போதும்   போதுமடி  ராச்சசி   இடை இடையே   இடைக்கும்  சிறுது   இடைவெளி   தருவோம்...  இராவெல்லாம்  கனிந்து   இனிந்து  இணைத்தே   இருப்போம்...                           --- விசி...