ஓர் கணவனின் தவிப்பு
அன்றொரு நாள் அதிகாலை பொழுது தலையணை அருகே அழகாக சிணுங்கியது... அவளின் அழைப்பை ஏற்ற என்கைபேசி... பக்கத்தில் இருந்தும் பார்க்காமல் தேடினேன்... கண்விழித்து கண்டேன் என்னவளின் அன்பு முகத்தில் புன்னகையின் புதுபுது அர்த்தங்கள்... தொடுதிரை தொட்டு கொஞ்சம் கரகரத்த குரலில் ஹலோ... மீண்டும் ஹலோ... எதிர் முனையில் மாபெரும் மௌனம் சிறுது நேரம் என் குரல் மட்டுமே ஒலிபரப்பு... பதில் ஒன்றும் இல்லை... படுத்திருந்தவன் எழுந்தேன் தூக்கமதை தொலைத்தேன் கனவுகள் கலைந்தது துக்கம் தொண்டையை அடைத்தது... கைகள் நடுங்கியது மனதுக்குள் ஏதோ ஒரு பெரும் பாரம் கூடிக்கொண்டது... ஒவ்வொரு அணுவும் ஓராயிரம் எரிமலையாய் என்னுள் எக்காளமிட்டு வெடித்துச் சிதறியது... சேவலின் சத்தம் சங்கு சத்தமாய் சூன்னியமானது... அவளையே சுற்றுது என் நினைவுகள்... அது ஏனோ ஏனோ அது என் மனம் மட்டும் துடியாய் துடிக்கு...