எழுந்து வாடா என் தோழா...



உரிமைகளை விற்று
ஊமையாகிக் கொண்டிருக்கிறாய்
உணர்வுகளைத் தொலைத்து
ஊணமாகித் தவிக்கிறாய்...

உழைப்பை மறந்து
ஊதாரியாய் திறிகிறாய்
உரக்கப் பேசினாலே-உன்
நரம்பேயுனைக் கொன்றுவிடும் 

தொடுதிரையில் தொட்டபடியே
தூங்கிக் கிடக்கிறாய்
தூசுகள் படிந்து 
துரும்பாய் உதிர்கிறாய்...

உதிரத்தின் வேகத்தில்
அதிரும் இளமையடா 
ஆகாய வீதியில்-இங்கு 
ஆழ்கடலே பாயுமடா...

எழுந்து வாடா
என் தோழா 
ஏணிகள் தேவையில்லை
துணிவுகள் போதும்...


-விசித்திரக்கவி...

Comments

  1. முயற்சி உனை திருவினையாலனாக்கும் நண்பா

    ReplyDelete
  2. அருமையான கவிதை.

    ReplyDelete

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்