காதல் தேவதையே
காத்தோடு காத்தாக உனை தேடுறேன்... இராத்திரியில் உனை-தானே நெனைச்சி பாடுறேன்... உன்னோடு உன்னோடு-பெண்ணே உயிர் கொண்டேன் உயிரோடு உயிரோடு-நான் உயிர்குலைந்து போறேன்... நினைவோடு நினைவாக நீந்திப் போகிறேன்... நினைவிலே நீ வந்தால் நிம்மதி இலக்கிறேன்... விழிகள் யெல்லாம் வலியாலே வாடுதே வழிகள் இருந்தும்-உன் விழிகளை காணலையே... சின்னச் சின்ன ஆசைகளில் நீ தானோ என்னை சிலிர்க்க வைத்தவள் நீ தானோ... இதயச் சுவரிலே உன் பிம்மம் சிதைந்து போகுதே என் இன்பம்... அந்தி சாயும் நேரத்தில் தான் -நான் அமராவதி கரையோரம் உனக்காக காத்திருக்கேன்... காணாமல் போன -எந்தன் காதல் தேவதையே இமைக்குள் நீயும் கொஞ்சம் வாயேண்டி... நான் இன்றாவது தஞ்சம் கொள்கிறேன்... ✍️விசித்திரக்கவி