Posts

Showing posts with the label காவியமும் ஓவியமும்

என் அதிகாலைப் பொழுது...

Image
அதிகாலைப் பொழுதெல்லாம் அவள் முகம் பார்த்தே, அழகாய் என்னுள் விடிகிறது... வெண் நிலவு மறைந்த பின்னே பெண் நிலவு இன்னும் மயங்குது... மயக்கும் கண்கள் மயங்கிக் கிடக்குது மத்தாப்பாய் உதடுகள் அதிகம் சிரிக்குது... எதையோ சொல்லுது ஏக்கங்களை கூட்டுது ஆசையாய் கிள்ள கன்னங்கள் பூக்குது... வானவில் ரெண்டும் வாடி கிடக்குது அதை கருமேகம் சூழ்ந்து கிடக்குது... இராத்திரி நேரத்து இரகசியங்கள் கொஞ்சம் செல்லமாய் எட்டிப்பார்க்குது மீண்டும் இதயத்தை மெல்லமாய் தட்டிப்பார்க்குது... அன்னம் அசையாமல் அசந்து அழகு மயிலென அடி நெஞ்சில் மத்தளம் கொட்டுது...           ✍விசித்திரக்கவி 

சந்தேகம் வேண்டாமடி...

Image
கண்கள் ரெண்டும் கருப்பு வெள்ளை ஓவியமா...? காதல்மொழி பேசும்-என் கற்பனைக் காவியமா...! எண்ணத்திரையில் தோன்றும் வண்ணத்திரை பாவையம்மா, நீ பல்லவ நாட்டின் பதுமையம்மா...! தேன்துளி கொண்டு தேவதை நீயென வரைந்தானா...! தித்திக்கும் தமிழ் கொண்டு செவ்விதழ் படைத்தானா...! செந்நிறப்பூ கண்டு செவ்வாழை தண்டென, செந்தமிழ் நாட்டு பெண்ணுக்கு உரு கொடுத்தானா...! பூங்காற்றை பூவென பறித்து நிலவென உருக்கி, உயிர் கொடுத்தானா...! பூச்சரமாய் தொட்டுத்தானா...! தேவதைகளின் நகலென நகம் வைத்தானோ...! தேகம் எல்லாம் சந்தனத்தால் இளைத்தானோ...! இளையவளே கண்ட நாள்முதல் கனவுகளில், தொட்டுத்தொட்டு பார்க்கிறேன்...! தூக்கத்தினை தொலைக்கிறேன்...! சந்தேகம் வேண்டாமடி சந்திரனும் சொல்வாண்டி...! சாட்சியென கொள்ளடி சம்மதமென கொஞ்சம் சொல்லடி...!                    ✍விசித்திரக்கவி

காவியமும் ஓவியமும்

Image
காவியமும் ஓவியமும் குழைத்து குழைத்து செய்தானோ சொல்லும் பொருளுமென செந்தமிழிலே உனை படைத்தானோ... கண்கள் ரெண்டும் இரட்டைக் காப்பியமா...? கடைவிழியினிலே மடையென வழிந்து இளமையினை வாட்டுதே... புன்னகையாலே பூக்கிறாய் பூ லோகம்தான் தங்கிட்டுமா...! இவள் பதுமையென புலோகம் தான் ஏற்றிட்டுமா...? தாரகையேயுன் இதழ் கனியிலே இரட்டை வரிகளா...!  ஆழ்ந்தது பார்த்தால் இன்பத்தின் சுவைகளா... விழிகளுக்குள்ளே வண்டாடுதோ எதை கண்டு திண்டாடுதோ...! கண் மணிக்குள்ளே காப்பியங்கள் பல நின்றாடுதோ...! தென்னாட்டு நிலவே...! தங்க நிழலென உன்னில்  தங்கிக் கொள்ள தஞ்சமென புகுந்தேன்... தாங்கி கொள்ளடி கொஞ்சம் ஏந்திக் கொள்ளடி, தவழ்ந்திட்டுவேன், வீழ்ந்திடுவேன் மீண்டும் உன்னிலே ஆழ்ந்திடுவேன்...                  -விசித்திரக்கவி