Posts

Showing posts from 2020

காதல் தேவதையே

Image
காத்தோடு காத்தாக உனை தேடுறேன்... இராத்திரியில் உனை-தானே நெனைச்சி பாடுறேன்... உன்னோடு உன்னோடு-பெண்ணே  உயிர் கொண்டேன் உயிரோடு உயிரோடு-நான் உயிர்குலைந்து போறேன்... நினைவோடு நினைவாக நீந்திப் போகிறேன்... நினைவிலே நீ வந்தால்  நிம்மதி இலக்கிறேன்... விழிகள் யெல்லாம் வலியாலே வாடுதே வழிகள் இருந்தும்-உன்  விழிகளை காணலையே... சின்னச் சின்ன ஆசைகளில் நீ தானோ என்னை சிலிர்க்க வைத்தவள் நீ தானோ... இதயச் சுவரிலே உன் பிம்மம் சிதைந்து போகுதே என் இன்பம்... அந்தி சாயும் நேரத்தில் தான் -நான் அமராவதி கரையோரம் உனக்காக காத்திருக்கேன்... காணாமல் போன -எந்தன் காதல் தேவதையே இமைக்குள் நீயும் கொஞ்சம் வாயேண்டி... நான் இன்றாவது  தஞ்சம் கொள்கிறேன்...                  ✍️விசித்திரக்கவி 

கடைசி கண்ணீர் துளி...

Image
(சிலருக்கு மட்டுமே பொருந்தும் ) தேடித் தேடி தீர்ந்து போகுதே என் கண்ணீர் தீர்ந்து போகுதே... இமைகளை விட்டு நீ எங்கே வெறுத்து போனாயோ - அதை  விற்றுப் போனாயோ... இமயம் தெரிந்ததென இளமை தீருமென இடையே விட்டு இளையவளே போனதென்ன புதுசுகம் வந்ததென பூமணம் அழைத்ததென என் புன்னகையோடு உன் பெண்நகையும்  அழிக்கப் போனாயோ... விளக்கு ஏத்தியவளோ விலகி போகலாமா விலக்கி போகலாமா ஆசைக்குதான் போகலாமா... பால்மணம் கண்டவள் பால்மனம் காணலையோ பால் நிலவே -நீ  பாழாய் போகலாமோ  உண்ண குறையா உடுத்த குறையா உறவிலே குறையா உணர்விலே குறையா என்னடி வைத்தேன் -நான்  என்னடி வைத்தேன் நீ வைத்ததை யெல்லாம் வாடாமலாடி வந்தேன்  சொல்லடி சொல்லடி சீமையிலே இல்லாத கருப்பட்டி கண்ணழகி காஞ்சிப் பட்டழகி...                    ✍️விசித்திரக்கவி

பாடல் வரிகள்

Image
Flower தானே பொண்ணு Fishya pola கண்ணு -அவ       Ok சொல்லி புட்ட கட்டிக்குவேன் நானு... நான் பஞ்சிமிட்டாய் வாங்கித்தரேன் பக்கத்துல கொஞ்சம் வாடி உன் பிஞ்சி விரலால எனை    தொட்டு புட்டு போடி... பக்கத்துல போனா சுட்டு தள்ளும் gunna அதுதான் அவ கண்ணா இவ எந்த ஊரு கண்ணா-அட  இந்த ஊரு பொண்ணா... துள்ளிக்கிட்டு போனா அவ இப்படியே துள்ளிக்கிட்டு போனா எப்படி பிடிப்பேன் நானு... என் dreamla Sweety scootyla Butterfly ya போல வந்தா... நான் கொஞ்சம் கண் திறந்து பார்த்தா அவ Colour full கனவ களைச்சிட்டு தானே போறா... உன்னோட facesu ரொம்ப brighttu அதை பாத்துபுட்டன் nighttu அட நான் இப்போ tube light டு கேரட்ட போல கலரு  அவ Powerfullana cloverru எனக்கு ஏத்த perfact டான National sugaru... அவ தானே  national sugaru...                  ✒️விசித்திரக்கவி

மாமன் மகள்

Image
மதுரை மல்லியாய்  மணக்கும் சந்தனமாய்  மான்விழி பார்வையில்-எனை   மத்தாப்பாய் சுத்திடுவாள்   மந்தரை பெண்ணழகியோ   மயக்கும் கண்ணழகி  மாலை நேரத்தில் -என்  மாங்குயில் ராகமவள்  மாதுளை கன்னத்தில்  மாங்கனி சுவையாள் மச்சானை மயக்கி  மடியிலே சிறைபிடிப்பாள்... மார்கழி மாதத்து மாந்தளிராய் மின்னிடுவாள்  மஞ்சனையிலே நெஞ்சோடு  மாமனை அணைத்திடுவாள்  மயக்கத்தில் என்  மடி சாய்வாள்  மச்சத்தை காட்டி-என்   மனதை கட்டிடுவாள்  மாமான் மகளோ -என்  மாமான் மகளோ  மணி மணியாய்-பூ   மாலையாய் பூத்து  மாலையிலே காத்திருப்பாள்...   

விழிகள்

Image
  மானாக துள்ளும்  மயிலோட மச்சவிழி  பார்வை ரெண்டும்  மச்சான மயக்குதடி...  பவளக்கொடி கூந்தலுக்கு  முல்லைக்கொடி முந்திக்கிச்சி...  மல்லிகைச் செடியோ  மனசுகுள்ள கதறுதடி...  பட்டுப் புடவையில  பட்டாம்பூச்சி பறக்குதடி...  நானோ நூலறுந்த  பட்டம் போல திரியுற... அதிகாலை பனி -போல்  நெஞ்சமெல்லாம் குளிருது...  நினைவெல்லாம் அவளையே -சுற்றி  சுற்றி வருகுது... 

வருகிறேன்...

Image
வருகிறேன்...  அனைவருக்கும் வருகிறேன்...  வருகிறேன் என்றால்  வருகிறேன் என்பதல்ல,  இனி வரவேமாட்டேன்  என்பதே பொருள்...  அங்கே பாருங்கள்...  ஓர் அழகிய தேர் தயாராகிறது...  பச்சை மூங்கிலும்  பச்சை ஓலையும்   சேர்த்து பின்னிய  தேர் எனக்காக  காத்திருக்கிறது...  இதுவரை சூடாத  பல மலர் மாலைகள்,  என் மார்பின் மேல்  மலைகளாக குவிகிறது...  இதுதான் என்  வாழ்விற்க்கு என்  வாழ்க்கை தந்த வெகுமதியா...  இங்கு பாருங்களேன்...  ஒரு அதிசயம் நிகழ்கிறது...  என்னை சுற்றி  ஓர் வட்டமேசை மாநாடு...  தம்பி சொன்னான்  திண்ணை எனக்குத்தான்...  அண்ணன் புலம்புகிறான்  அந்த புளியமரமும்   எனக்குத்தான் என்று...  தங்கை கேட்கிறாள்  இவன் என்ன செய்தான் நான் செய்ய...   பாவம் அவளுக்கு தெரியாது  என்னால் முடிந்ததை செய்தேனென்று...  மகனும் மகளும்  கைகள் பற்றி கதறுகையில்  என் பதறாத  இதயம் கொஞ்சம்  பதறி போகிறது...  மனைவி மாரடித்...

மல்லிகை நானும் சென்றுவந்தேன்

Image
அந்தியில் சந்திக்க -எந்தன்  ஆவி துடிக்கிறதே மொட்டவிழ்ந்த மலரை -நாட எந்தன் கை தவிக்கிறதே...  வட்டநிலா வந்ததும் -எனை  தேடி வந்திடுவாள் சுட்டநிலாவை கண்டாள் -தனை  சுடர் விட்டெரிவாள்...  பட்டுடல் தீண்டிட -என்  பக்கத்தில் வருவாள்  புத்தம்புதிய கற்பனைகள்  பல தருவாள்...  கொள்ளை அழகில் -கன்னி  தினம் பூத்திருப்பாள் பூத்தவளோ பூக்காதென்னை  பூப்பறிக்க காத்திருப்பாள்...  கொண்டவன் காண  மல்லிகை யெனை  முல்லை அவள்  கொண்டையில் சொருகிடுவாள்...  கண்ட அவனோ  கட்டுக் குலைந்திடவே  முல்லை இதழை  அள்ளிப் பருகிடுவான்...  தொட்ட இடமெல்லாம்  மின்னல் மின்னி  ஒளி மறைந்திட  நள்ளிரவில் களைத்திருப்பாள்...  பூவையாளோடு பூனானும்  பூலோகம் விட்டு  புண்ணிய லோகம்  சென்று வந்தேன்... 

பால் நிலவு

Image
செக்கசிவந்த செவ்வானமும்  சிவந்து போகும்  செவ்விதழ் கொண்டவளே  வட்ட பொட்டழகி...  வஞ்சமில்ல வஞ்சிக் கொடிஇடை அழகியோ  கண்டாலே போதையேற்றும்  கஞ்சாக் கண்ணழகி...  கருமேக காட்டாறு  கூந்தலுக்கு சொந்தக்காரி  அவள் செங்கரும்பு உதட்டுக்கு -நான்   சிட்டெறுப்பு காவக்காரன்...  பூ மேனியிலே  பொன்கருப்பு சாறெடுக்க  பால் நிலவில்  பாய் போடலாம் வா...   

தாவணிச் சிலையே

Image
ஆத்தாடி...  மேனி நிறைய  ஊர்வலமா வந்து  உதட்டு ரேகையில  ஊடுருவி கொஞ்சம்  தஞ்சம் கொள்ளவா...  மாங்கனி நெஞ்சத்தில்  மையல் கொண்டு  மஞ்சள் நிலவோடு  மஞ்சம் கொள்ளவா...  மல்லிகை பூவுக்கு  என்னடி மந்திரம் சொன்ன...  மான்விlழி பார்வையில்  மச்சானை மயக்குதடி...  அல்லி தண்டு  இடையில் நான்  துள்ளி விளையாட...   துளித் துளியாய்  நீ  நெளிந்து  என் ஆசைகளை அலந்து சொல்ல... அந்த இரவு  எந்த இரவு...  அது இந்த  இரவானால் அடடா...  போதும் போதும்  சொல்லாமலே சுகம் -தான்  சொக்கிப் போகுதடி... 

இறைவா நீ வா...

Image
இறைவா நீ  இருக்கிறாயா...?  நீயே தான்  இறைவா இருக்கிறாயா...?  அங்கே என்ன  தேடுகிறாய்...  இன்னும் ஏதேனும்  புதிய சோதனை இருக்கிறதா...?  அந்த சோதனையில்  தரத்தில் இன்னும் பாவமா  போதும் போதும்...  இதோ  பார்  குப்பை தொட்டியில்  குழந்தையின் குரல் கேட்கிறதா உனக்கு... கண்கள்  இருக்கிறதா உனக்கு...  அப்படியே இருந்தும்  கருவறைக் குள்ளே  கற்புகள் சூறையாடப்படுவதை  கண் கொட்டாமல்  ரசிக்கிறாயோ...  ஊருக்கே  உதவியவன்  ஊருக்குள் ஆண்டியாக ஆகலாமா...  கொடுத்து சிவந்த கரங்கள்  சீல் வடியலாமா...  பள்ளி அறையில்  பிஞ்சுகளை மஞ்சமிட வைத்து  மதயானை போல்  மண்மேலே திரிவது நியாயமா... உழவனே ஒருபிடி  சோத்துக்கு சகலமா...  செத்து செத்து  அவன் சரிந்து போகலாமா...  தவறு செய்தவன்  தப்பிக்கிறான் அதை  தட்டி கேட்டவன்  தரமாக தண்டிக்கப்படுகிறான்...  நாக் கெல்லாம்  கொடும் நாகங்களாக மாறி  நெஞ்சத்தில் நஞ்சினை  கக்கிகக்கி நொந்ததை  காணலையோ நீ...  ஈர மண்ணிலே  இன்னும் ஏனடா  இடி மேல் இடி  விழ காரணம்...  பத்தினியோ பைத்தியம் போல்  பத்திய மிருந்தும்  பாழாய் போன  உலகம் வேசி பட்டம் கட்டுவதோ...  உனை அழைத்து  அழைத்து அழுதது போதும்...  உன் தொழில் ம...

ஓர் கணவனின் தவிப்பு

Image
அன்றொரு நாள்  அதிகாலை பொழுது  தலையணை அருகே  அழகாக சிணுங்கியது...  அவளின் அழைப்பை  ஏற்ற என்கைபேசி...  பக்கத்தில் இருந்தும்  பார்க்காமல் தேடினேன்...  கண்விழித்து கண்டேன்  என்னவளின் அன்பு  முகத்தில் புன்னகையின்  புதுபுது அர்த்தங்கள்...  தொடுதிரை தொட்டு  கொஞ்சம் கரகரத்த  குரலில் ஹலோ...  மீண்டும் ஹலோ...  எதிர் முனையில்  மாபெரும் மௌனம்  சிறுது  நேரம்   என் குரல்  மட்டுமே ஒலிபரப்பு... பதில் ஒன்றும் இல்லை...  படுத்திருந்தவன் எழுந்தேன்  தூக்கமதை தொலைத்தேன்  கனவுகள் கலைந்தது  துக்கம் தொண்டையை அடைத்தது...  கைகள் நடுங்கியது  மனதுக்குள் ஏதோ  ஒரு பெரும்  பாரம் கூடிக்கொண்டது...  ஒவ்வொரு அணுவும்  ஓராயிரம் எரிமலையாய்  என்னுள் எக்காளமிட்டு  வெடித்துச்  சிதறியது...  சேவலின் சத்தம்  சங்கு சத்தமாய் சூன்னியமானது... அவளையே சுற்றுது  என் நினைவுகள்...  அது ஏனோ  ஏனோ அது  என் மனம் மட்டும்  துடியாய் துடிக்கு...

சுமைதாங்கி

Image
உன் கண்ணாடி பார்வையில்  என் இதயம் உருபட்ட  காயங்கள் சிலகோடி...  தேனீகள் கட்டும் கூட்டில்  உன் கள்ள பார்வைபட்டு  கொப்பளித்த கொப்பளங்கள் பலகோடி...  உடல் இட்ட முட்டை  ஈட்டி பார்வை முட்டி  அந்தரத்தில் சமைத்த மாயமென்ன...  நரம்பின் நாளங்களில் ரத்தமில்லை  ஆழ் கடலில் அமைதியில்லை  எங்கும் எதிலும் நினைவில்லை...  சொல்லும் சொல்லில் பொருளில்லை செல்லும் வழியில் நீயில்லை -அதை  சொல்லும் நிலையில் நானில்லை...  நீல மேகத்தில் நிலவில்லை  எரியும் தீயில் அனலில்லை  உடலில் உயிர் இல்லை  உணர்வில் உன்னத மில்லை...  வசைப்பாடிய வார்த்தை கேட்டு  வானவில்லில் ஏழு நிறமில்லை...  இனி என்றும் உனை  ஏற்கும் ஏகாந்தத்தில் யானில்லை...  உன்னால் எதிர் வரும்  என்காலம் சுமைதாங்கியாக மாறட்டும்... 

அவளது நினைவுகள்

Image
மழை நீரில்  நீந்திச் சொல்லும்  காகித கப்பல் -போல்  இனியவளின் நினைவுகள்...  இனியேனும்  கரை சேருமோ...  இல்லை சாகரத்தில்  தீவாய் தனியாய் திரியுமோ... 

சொட்டும் காதல்துளிகள்

Image
நட்சத்திரங்கள் வெள்ளி பந்தை பார்த்து காதல் பார்வையினை பொழியும் நேரமது...  ஆம், அது ஓர் அதிகாலை பொழுது,  மார்கழி மாதத்தின் மாபெரும் குளிரின் நடுக்கமும் அதன் தாக்கமும் அவன் உடலை ஏதோ செய்து கொண்டிருந்தது...  சட்டென்று முந்திக்கூவியின் முணுமுணுத்தலில் கண்விழித்தவன்  செய்வது அறியாது, அந்த ஒளி குறைந்து ஒளிரும் பல்புகளையே வெறித்து பார்க்கையில் என் மனது என்னிடம் தவறு செய்து விட்டாய் மாறா என்று என்னை திட்டிகொண்டிருந்தது...  இன்றைய தேதியிலிருந்து சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்...  நிற்க இடம் இல்லாமல் மிகுந்த வேகத்துடன் 5c என்ற பேருந்து கண்ணகி நிறுத்தத்தில் நின்றது...  அலையும் அலை  கடல் போல்  ஆறடி கூந்தலும்  காற்றிலே கூத்தாடுது...  பொட்டு வச்ச  பூந்தளிர் மேனியோ  புழுதி பறக்க  புல்லாங்குழலிசை பாடிவருது...  கால் முளைத்த  கன்னி இவள்  வெள்ளைநிற தாவணியில்  பிள்ளை அவள்...  தேவதை அவளின் அழகை வரிகளாக வர்ணித்து தான் மனத்துக்குள்ளே கவிதையினை  அரங்கேற்றிக் கொண்டிருந்தான் மாறன்...  அடித்து பிடித்து ஏறினாள...

கூடவே வாரேன்

Image
ஆத்து தண்ணி -மேல  ஆலமர நிழலு  அழகா நின்னு  காத்தாற குளிக்குது...  கால் வலிக்க -என்   கவலையோடு காத்திருந்தேன்...  அத்தை மகளோ  அதிசய வெண்நிலவோ...  ஆத்தங்கரை மேல  கழுத்த வளைச்சி  இல்லாத இடுப்புல -நீ  இடையோடு இறுக்க...  செப்பு குடம் -செய்த  புண்ணியம் கண்டு  இல்லாத ஆசையெல்லாம் எங்கிருந்தோ ஓடிவருது...   வளைஞ்சி நெளிஞ்சி -நீ  குணிஞ்சி குடம்  தூக்க ஐயோ-தாங்காதே  என் நெஞ்சம் ...  வெட்டருவா கண்ணால  திட்டாத அயிரமீனு  நாலு அங்கேயே -அண்ணம்  தண்ணியிலாம செத்துப்போகும்...  கண்ணால சாடை  மட்டும் காட்டு  குடத்து தண்ணியா  கூடவே வாரே...                 என்றும் தமிழோடு                       விசித்திரக்கவி 

காதலனே...

Image
ஆசை கள்வனே  அழகிய காதலனே  அகிம்சையாய் அழகிய  இம்சைகள் தந்து  அதிசயிக்கும் வேலையிலே -நானும்  ஆழ்கடலில் ஆடுகிறேன்...  இதோ பார்...  வெண்ணிலா வந்து  வெண்ணை கேட்டு  திண்ணையிலே என்னை  தினம் தினம் பாடுது...  தித்திக்கும் தமிழோ சத்தான  கவிதை தந்து...  திகட்டாத முத்தம்  தாவென கேக்குது...  தென்றல் வந்து  இதமாய் தீண்டி  எனை நித்தமும்  திண்டாட வைக்குது...  ஆறடி கூந்தலிலே  அருவியென விழுந்து  அதிகாலை வரை -இந்த  மல்லிகை மயக்குது...  மாலையிட்ட மன்னவனே  காலமெல்லாம் நீ காவலனே  எனக்கு மட்டும்  தினம்  திருடனே...  சாம நேரத்து  சங்கீதம் கேட்டு  நட்சத்திரங்கள் ஓடிவந்து  எட்டிப் பார்க்குது...  முந்தி கொண்ட  கூரையோ முக்காடு போட்டு முழுசா மூடிக்கிச்சி...  ஆசையெல்லாம் அழகா  தண்ணிமேல பக்குவமா  பத்திக்கிச்சி பக்கத்துல  நீ வந்தணைக்க  நிம்மதியாச்சி...               என்றும் தமிழோடு...

இவள் இனி கண்ணீருக்கே தத்துப்பிள்ளை...

Image
கண்களால்  காதல்  சொல்லி  காதுகள்  இனிக்க  இனிக்க  கதை  பேசியவளோ...  கணவனாகும்  முன்னே  கார்கால  மேகம்  போல்  கண்ணீர்  சிந்தி  போகுதம்மா..  கனவுகளை  கொடுத்து  கண்களை  களவாடியவளோ...  கருங்கூ ந்தலில்  பூச்சூடி  கண்டாங்கி  சீலைகட்டி...  கண்கவரும்   ஓவியமொன்னு  கலைந்து  போகுதம்மா...  வரம்   கொடுத்தச்  சாமி   ஒன்னு...  எனக்கு  வரம்  கொடுத்தச்  சாமி  ஒன்னு  எந்தன்  வாசற்படி  வாரமா  தான்  போகுதம்மா...  எந்தன்  காதல்செடி  பூபூக்கும்  முன்னே  மாற்றான்  வீட்டு  மல்லிகையா  மணந்து  மனசு  நொந்து  போகுதம்மா...  சாதி  சனமெல்லாம்  ஒன்னு   சேந்து  ஒன்னான  மனச  ரெண்டாக்கி  அதுல  ஒன்ன  புதைச்சு  புது  வீட்டுக்கு  கூட்டி  போகுதம்மா...  கை  புடுச்சவனோ...

அத்தை மகள்

Image
 அத்தை மகள்  ஆத்து  தண்ணியோ  அழகா  சலசலக்குது  அத்தை  மக  மேனியோ  பளபளக்குது...  பட்டாம்  பூச்சி புதுசா  கண்ணடிச்சி  பஞ்சு   மெத்தையில்  நெஞ்சோடு  ஒட்டிக்கிச்சி ...  எத்தனையோ நாள்  ஏக்கத்துக்கு  இன்றைய  இரவு இலவம்  பஞ்சுக்கு  இலக்கணமா  மாறிபோச்சி... கொஞ்சம்  கொஞ்சமா  கொஞ்சலோடு  கொஞ்சையில  கெஞ்சி  கெஞ்சி  முட்டி   தள்ளுறியே...  மிஞ்சி  மிஞ்சி   -போனா  பக்கத்துல  வந்து  கண்ணத்த  கடுச்சி  கண்ணால  கொல்லுறியே..  பவள  மல்லி  உதட்டுக்கு  இளம்  பஞ்சு  மிட்டாய்  சாயம்  தான்   ஏனடி...  சாயங்காலம்  போயிடுச்சி  சாயமெல்லாம்   வெளுத்துடுச்சி  செல்லமா  சிணுங்கி  ஏன்டி  சிலுத்துக்குற...  ஹ்ம்ம்... சிங்காரி   உன்  சின்ன  உதட்ட ஒட்டு  மொத்தமா  -நான்  குத்தகைக்கு...

என்னடி கள்ளி ...

Image
ஆத்தாடி  உனை  பாத்தாலே  காத்தாடி  -போல கூத்தாடி  போரேண்டி... கண்ணாடி  முன்னாடி  கண்ணாமூச்சி  நா   ஆடி  கண்ணடிச்சி  நான்  கட்டிலில கிடக்குறண்டி...  கண்ணால  கட்டி  -என்  கண்ணம்  கிள்ளி  காதல்   சொல்ல  கனவுலயாச்சும்  வாயேண்டி...  என்னடி  விழிகள்  அது... இமைகள்   ரெண்டும்  என்னமோ  ரகசியம்  சொல்லி  மின்னுது... என்...  நின்றாடும்  நந்தவனமே...  ஆசைகளின்  அதிசய  களஞ்சியமே...  சொல்லடி  என்  செல்லக் கிறுக்கி  ...                                                                  -என்றும் தமிழோடு                                        ...

கூடல் பொழுதுகள்

Image
 கூடல் பொழுதுகள்  கண்ணயரும்  வேளையிலே  கன்னியவள்  கால்கொலுசு  கலகலக்க  காதோரம்   இன்பக்  காணம்  கரைய...  கன்னியவள்  சிலையென  கண்ணனிவன்  சிற்பமென  கண்ணடாதோர்  காவியம்  கலைந்ததோ  ஓவியம்...  தீராதாகமென  மேனி  கடற்கரை  போலே...  விடியா  வானம் விடியும்  வரை  வீணையின்  ராகம்  நாடிநரம்பெல்லாம்  நர்த்தனம்  நொடிக்கு  நொடி  ரதியவளின்  கீர்த்தனம்...  மஞ்சணையிலே  மன்மதனின்  மத்தளங்கள்  மாங்கனி  அவளின்  மாதுளை  கன்னங்கள்...  அடடா,  இரகசிய  இரவினில் எத்தனை எண்ணங்கள்.... போடா,   இதில்   இத்தனை  இன்பங்கள்...  மதியது  மத்தியிலே  மங்கைக்கு  இடையினிலே  போடா,  நான் மட்டும்  இன்பக்  நடுக்கடலினிலே...  தொடையழகா  இல்லை  இந்த  இன்ப கவிநய  நடையழகா...  பாவழகா  இல்லை  இந்த  பருவ  பாவையழ...

முயற்சி

Image
 முயற்சி  வா...  வா...   தோழா  வானம்  தான்  இருக்கு...  வாசற்  படிக்குள்  என்னதான்  இருக்கு...  இதய  கூட்டிலே  ஈரம்  தான்  இருக்கு...  நீ  ஏறி  மிதிக்க  புது  வீரமிருக்கு...  எட்டி  பிடிக்க  விண்மீன்  இருக்கு...  கட்டிப்  அணைக்க  மின்னல்  இருக்கு...  இடித்து  நொறுக்க  இடி  இருக்கு...  துள்ளி  விளையாட  தூரல்  மழையிருக்கு...  துரத்தி  அடிக்க  புயல்  இருக்கு...  துணிந்து  போக  -இனி  பயம்  எதற்கு...  இருட்டு  குள்ளே  இரண்டு  காதிருக்கு...  முள்  பார்க்க  மூன்றாவது  கண்ணிருக்கு...  கல்  எறிய  கோள்  இருக்கு...  இனி  கண்ணீர்  தான்  எதற்கு...  சாட்டை  எடுத்து  விட்டதை  விரட்டு...  அள்ளி  பருக  அருவி  இருக்கு...  நீ  ஆட்டி  வைக்க...

கூடல் பொழுதுகள்

Image
கூடல் பொழுதுகள்  உதடுகள்  நான்கும்  ஊஞ்சல்   ஆட  உடல்கள்  ரெண்டும்   உருமாறி  உருகிப்  போகட்டும்...  இமைகள்  எட்டும்  கொஞ்சம்  மூடட்டும்  இரண்டாம்  உலகம்  இன்றே  காணட்டும்...  காற்றும்  கலங்கட்டும் காதலன்  காதலி  தேடி  ஓடி  சிட்டாக  ஒட்டட்டும்...  பட்டுடல்  பட்டுப்-போல்  பின்னட்டும்  தொட்ட  இட  மெல்லாம்  தேனாக  சொட்டட்டும்...  மின்மினி  மட்டும்  மின்னட்டும்   ஆசைகள்  எங்களை  போல  கட்டிலில்  துள்ளட்டும்...                              என்றும்  தமிழோடு                                   @விசித்திரக்கவி...

இன்றும் பச்சை மண்ணோ ...

Image
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து எனும் மூச்சில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ... உங்கள் கருத்துகள் மூலம் உயிர் கொடுங்கள்... இன்றும்  பச்சை  மண்ணோ ... பச்சையாக  சொல்கிறேன்...  இருண்ட  வானில்  இருள்  பச்சையாகவே  இருந்தது...  கண்ட  பச்சை  கனவுகள்  கண்விழித்தும்  கண்களுக்கு  இடையே  பச்சையாகவே  பளிச்சிட்டது...  அந்த  இரவின்  பச்சை  தூக்கத்தில்  பச்சையான  பச்சை  கனவு  என்ன?...    பக்கம்  வாருங்கள்...  பச்சையை  பச்சையாக  பச்சை  போலே  பச்சையாக  பச்சை  பாமர  உழவன்  உற்பத்தி  செய்கிறான்...  கண்களுக்கு  பச்சையாகவே  தெரிந்தது... அது  பச்சைமண்  அல்ல  என்று...  வானத்தின்  வாக்குக்கு  வாய்ப்பளித்து  வாய்பிளந்து  வானத்தை  வற்றாத  பச்சை  கனவோடு  கண்களில்  ஈரம்  சொட்ட  கனவு  காண்கிறான்...  அந்நேரம்  வெள்ளை...

தீயாய் தென்றல்

Image
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து எனும் மூச்சில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ... உங்கள் கருத்துகள் மூலம் உயிர் கொடுங்கள்... தீயாய் தென்றல்   என்னவனே ... தென்றல்  வந்து  தீண்டி  தீண்டி  தினம்  தினம்  -நானும்  தீயில்  பாய்கிறேன்...  தேடித்  தேடி  தேய்ந்து  தொலைக்கிறேன் தீவாய்  நானும்  -உன்  நினைவில்  போகிறேன்... சாரலோடு  சண்டை  போட்டு  புயலோடு  புல்லாங்குழல்  -கொண்டு  பொழுதெல்லாம்  பூவே  உன்னோடு  புலம்புகிறேன்... புன்னகை  யெல்லாம்  நீ  பறிக்க-  நிழலாய்  நானும்  சாய்ந்து  சாகிறேன்...  காற்றோடு  கரைந்து  தீயினை  தீண்கிறேன் நீரிலே  நடந்து  நிலத்திலே  நீந்துகிறேன்...  நான்  இல்லாமல் நீயாய்  தவிக்கிறேன்...  கனவோடு  காய்ந்து  நிஜத்தினிலே  நனைகிறேன்...  காகிதத்தோடு  கனைத்து  காலத்தோடு  கை கோர்க்கிறேன் கண்ணே  உனை-காண  காதலோட...

நவீன நாகரிகம்

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து எனும் மூச்சில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ... உங்கள் கருத்துகள் மூலம் உயிர் கொடுங்கள்... நவீன நாகரிகம்  குலையும்  மார்காட்டி  குலையாத  இடைகாட்டி  தொடுத்  திரையில்  தொப்புளையும்  காட்டி  தொடை  தொட  உடை  காட்டி  வண்ணத்  திரையில்  வளமை  உடல்  காட்டி  சரித்திரத்தில்  என்ன  சாதிக்க  போகிறீர்கள்...  உணவுக்கு  உடல்  விற்ற  வேசி  கூட  நான்கு  சுவற்றுக்குள்  நாகரிகமாகத்  தான்  நடக்கிறாள்...  உங்களின்  உல்லாச  உணர்வுக்கு  பிஞ்சுகளின்  பார்வையில்  மார்வாடிக்  கடையில்  மானம்  விற்ற  மங்கையராய்  மணக்க  வேண்டுமா...  இன்றைய  காணொளி  நாளைய  உன்  மகனும்  மகளும்  காணலாம்...  ஜாக்கிரதை...                                   ...

கிராமத்துக் காதல் வரிகள் ...

Image
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து எனும் மூச்சில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ... உங்கள் கருத்துகள் மூலம் உயிர் கொடுங்கள்... ஓர் இரவின் நட்சத்திர குளியலில்  தலைவனும் தலைவியும் பிரிவின் வலியை  பாடி தீர்கிறார்கள் ... இவ்வாறு ... கிராமத்துக் காதல் வரிகள் ... அடியே  அழகியே             (தலைவன்) ஐந்தடி  காப்பியமே             அசைந்தாடும்  ஓவியமே  வானத்து  வெண்னிலாவும்  வாய்ப்பிளக்கும்  அதிசயமே...  என்  வஞ்சிக்  கொடி  இடையே...  இக்உம்...             (தலைவி) அந்தி  நேரமும்  வந்தாச்சு  அகல்  விளக்கும்  வைச்சாச்சு  மச்சானை  பாத்தாச்சு மெத்தையும்  போட்டாச்சு...  அல்லி  ராணிய       அள்ளி  எடுத்தாச்சு  தொட்ட  இடமெல்லாம்  தொடர்  கதையாச்சு...  ஆசை  மச்சானுக்கு    (தலைவன்) அள்ளி  தந்தாச்சு  -இனி...