மாமன் மகள்
மதுரை மல்லியாய்
மணக்கும் சந்தனமாய்
மான்விழி பார்வையில்-எனை
மத்தாப்பாய் சுத்திடுவாள்
மந்தரை பெண்ணழகியோ
மயக்கும் கண்ணழகி
மாலை நேரத்தில் -என்
மாங்குயில் ராகமவள்
மாதுளை கன்னத்தில்
மாங்கனி சுவையாள்
மச்சானை மயக்கி
மடியிலே சிறைபிடிப்பாள்...
மார்கழி மாதத்து
மாந்தளிராய் மின்னிடுவாள்
மஞ்சனையிலே நெஞ்சோடு
மாமனை அணைத்திடுவாள்
மயக்கத்தில் என்
மடி சாய்வாள்
மச்சத்தை காட்டி-என்
மனதை கட்டிடுவாள்
மாமான் மகளோ -என்
மாமான் மகளோ
மணி மணியாய்-பூ
மாலையாய் பூத்து
மாலையிலே காத்திருப்பாள்...

Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...