காதல் தேவதையே
காத்தோடு காத்தாக
உனை தேடுறேன்...
இராத்திரியில் உனை-தானே
நெனைச்சி பாடுறேன்...
உன்னோடு உன்னோடு-பெண்ணே
உயிர் கொண்டேன்
உயிரோடு உயிரோடு-நான்
உயிர்குலைந்து போறேன்...
நினைவோடு நினைவாக
நீந்திப் போகிறேன்...
நினைவிலே நீ வந்தால்
நிம்மதி இலக்கிறேன்...
விழிகள் யெல்லாம்
வலியாலே வாடுதே
வழிகள் இருந்தும்-உன்
விழிகளை காணலையே...
சின்னச் சின்ன
ஆசைகளில் நீ தானோ
என்னை சிலிர்க்க
வைத்தவள் நீ தானோ...
இதயச் சுவரிலே
உன் பிம்மம்
சிதைந்து போகுதே
என் இன்பம்...
அந்தி சாயும்
நேரத்தில் தான் -நான்
அமராவதி கரையோரம்
உனக்காக காத்திருக்கேன்...
காணாமல் போன -எந்தன்
காதல் தேவதையே
இமைக்குள் நீயும்
கொஞ்சம் வாயேண்டி...
நான் இன்றாவது
தஞ்சம் கொள்கிறேன்...
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...