விடைகள் அறியுமா...
வானவிலுக்கு வயதாகுமா
வெண்ணிலவு விண்மீனாகுமா...?
வெற்றி சொல்லி
தோல்வி தோழனாகுமா...?
வானத்திற்கு வாசலுண்டா
தென்றலுக்கு தேகமுண்டா...?
பனித்துளிப் போல் -ஓர்
மழைத்துளி உண்டா...?
இமைமூடும் நேரம்தான்
இருளின் நிறமா...?
மெழுகு உருகி
தீயெரிவது வரமா...?
தேகங்கள் இணைவது
தேன் சுகமா...?
நீருண்ட மேகங்கங்கள்
நினைவுகளை உண்ணுமா...?
வினாவுக்கு விடைதான்
சரியான பதிலா...?
பதில் தெரிந்ததினால்தான்
கேள்வி சரியா...
தவறுக்கு தண்டனை
போதும் என்றால்
நீதிக்கு தான்
நித்தம் நிம்மதியா...?
ஆசை வருவது
உணர்வு என்றால்,
உள்ளூற அழுவது
உத்தமனின் சுகமல்லவா...?
முத்தங்களில் ஓசை
முத்து அறியுமா...?
முத்தின் காலம்
முத்தம் பொறுக்குமா...?
ஓசைகள் மட்டுமே
உன்னத பாசைகளா...?
அசைவுகள் சொல்லி
அர்த்தங்கள் புரிவதில்லையா...?
கோவம் கொண்டு
கொதிக்கும் எரிமலை,
தாகம் வந்தால்
தண்ணீராய் மாறிடுமா...?
காரணங்கள் சொல்லி
கண்ணீர் கரைசேர்ந்திடுமா...?
காயம்கொண்ட தழும்புகள்
வேதனைகளை வென்றிடுமா...?
எத்தனையோ வேதங்கள்
எத்தனையோ கேள்விகள்
எத்துணைதான் யாருக்கு
எத்தனைநாள் பயணத்திற்கு...?
-விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...