Posts

காலனே கேளடா...

Image
கண் மூடி கண்ணுறங்க போகிறேன் காலனே காவலுக்கு பக்கத்தில் வாருமடா... கண்ணிமை அசையாமல் கண் விழிக்கும் வரை சிவசிவா என்றே ஜீவனை காத்திடு... நீயும் நானும் நடமாடும் சவமடா சிவமே நம்மில் சக்தியென கூறடா...            விசித்திரக்கவி 

தமிழே நீயும்...

Image
எட்டய புரத்தானும் எட்டாவதாக பிறந்தவனும் கவிஞனாய் ஆகும்போது ஏழை வீட்டில் பிறந்த நானும் கவிஞன் இல்லையா... வார்த்தைகளையும் கற்பனைகளையும் வாழ்வியலோடு வளைத்து வர்ணங்களை கூட்டும் கம்பனையும் வள்ளுவனையும்-போல் நானும் தமிழை நேசிக்கலையா... இல்லாத வீட்டில் பொல்லாத பிள்ளை பிறந்தா னென்று தமிழே நீயும் தாயாகலையா...! தவிக்கும் போதெல்லாம் தாகத்தினை தீர்க்கலையா...! தேன் கலந்து தாய்தமிழை நீ ஊட்டலையா...! செந்தமிழே சிந்தனையில் வைத்தேன் செந்தீயில் தத்தளிக்க விட்டாயோ...? அறிந்ததெல்லாம் தமிழே தமிழே போற்றுவதெல்லாம் உன் புகழே...! இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளையென தாயே நீயும் எனை தள்ளிப் போனாயோ...! ஆவென...ஓவென நான் அழுது உயிரும் உடலும் வியர்த்தால் தாயே நீயும் தாங்கிடுவாயோ...! பாண்டிய நாட்டு-எம்  பவளக் கொடியே பக்தனாய் நான் வாழ பாரபட்சம் ஏனடி...?              -விசித்திரக்கவி 

ஆவணித் திங்கள்-என்ஐயம் தீருமா...!

Image
கண்ணா...! கண்ணா...! கண்ணெல்லாம் பாடுது நெஞ்சமெல்லாம் வேகுது அங்கமெல்லாம் அழுகுது உன்குரல் திசைகேட்டு செவிகள் ரெண்டும் ஓடுது, உயிரும் வாடுது-அது உள்ளூற உனை தேடுது... ஆறுதல் சொல்ல ஆகாயம் விட்டு வாராயோ...! காற்றை கரைத்து கீதமென சொல்வாயோ...! மாயங்கள் பல புரிந்து மானிடனெனை மயக்குவாயோ...? மாயவனே மணிவண்ணா...? பாரதம் கொடுத்தவனே பரந்தாமா...! பாவியெனை பாரடா பாரெல்லாம் கேளடா, பட்ட துன்பம் பாதி தருகிறேன்... பாற்கடலே கதியென பாம்பே பாய்யென பக்கத்தில் தேவியென பாதி உறக்கமேனடா...? ஆட்டி வைப்பவனே-நீ ஆட்டத்தில் வேடிக்கையா..! ஆடுபவன் எல்லாம் உன் கைப்பாகையா...? ஆட்டம் முடியுமா-அது அது அரங்கமேறுமா...? ஆவணித் திங்கள்-என் ஐயம் தீருமா...!                         ✍️விசித்திரக்கவி 

கள்ளியாய் வில்லியாய் சாகசங்கள் போதுமடி...

Image
வெண்சங்கு நீரெடுத்து விண்மீனை பிரித்தெடுத்து தேன்கலந்து கொஞ்சம் தேகத்துக்கு உருகொடுத்தானா...! வெண்ணிலவை விளக்காய் வைத்து அங்கமெல்லாம் தங்கமென அளந்து அளந்து அசைவு கொடுத்தானா...! இசைக்கு இசைவாய் இடைக்கு கொஞ்சம் இசைவு இசைந்து இன்னிசை மீட்டுக்கிறாய்... கண்களால் மத்தளம் கொட்டுக்கிறாய், காற்றைத் தொட்டு களவரம் செய்து கைதியாய் சிறையிலடைக்கிறாய்... சின்னச் சின்ன குறும்புகள் செய்கிறாய் செவ்வானத்தில் செம்மீனை ஏனடி தேடுகிறாய்...! செய்வதெல்லாம் செவ்வனே செய்து வைக்கிறாய், செவ்வந்தி பூக்களுக்குள் சண்டையினை மூட்டுகிறாய்...! புல்லாங்குழலாய் உன் குரல் கேட்டு பூக்கள் எல்லாம் பூப்படைந்து பூக்கிறது....! காய்க்காமலே அது  கனி ஆகிறது... கள்ளியாய் வில்லியாய் சாகசங்கள் போதுமடி என் சாதாரண கண்கள் சத்தியம் தாங்காது...                   விசித்திரக்கவி 

சில நேரம்....

Image
(சில நேரம்....) சின்னச் சின்ன கண்ணீர் துளிகளை நிம்மதியென நெஞ்சம் கொஞ்சம் ஏங்குமே... (சில நேரம்....) சொல்ல வரும் வார்த்தைகளை சொல்லாமல் நாடு கடத்த மவுனம் தோன்றுமே... (சில நேரம்....) விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து விதியை நொந்து மனம் பாடுமே... (சில நேரம்....) மயக்கம் கொள்ளும் மானிடர் மத்தியில் மாயவித்தை காட்டுமே மனசாட்சி அதிகமது குத்துமே... (சில நேரம்....) சில கவிதைகள் பல நேரம் காகிதங்களை கண்ணீரில் கரைய வைக்குமே... (சில நேரம்....) எட்டிய பொருள் கிட்டாமல் போனால் நெஞ்சத்தை முட்டுமே துக்கத்தை தூண்டுமே... (சில நேரம்....) தேடித்தேடி சேர்த்ததெல்லாம் தேளாய் கொட்டுமே தேன் கூட தினம் கசக்குமே... (சில நேரம்....) நிழலும் நிம்மதியில் நித்தம் வாழுமே நிஜம் மட்டும் சோதனையில் வாழுமே... (சில நேரம்....) சில நேரம் பல நேரம் நரகத்தில் நாடோடியாய் நடக்க கற்றுத் தருமே... (சில நேரம்....) அந்நேரம் எந்நேரமென இந்நேரம் சில உள்ளங்கள் உள்ளூற பார்த்திருக்குமே...                        _விசித்திரக்கவி    

கலைமகளே பாரடி...

Image
மாயையில் விழுந்தேனடி மயக்கங்கள் கொண்டேனடி... மாமனிதர் மத்தியிலே, மடையனென தவழ்ந்தேனடி... அறிந்ததென ஆயிரமும் பாவங்கள் தானடி... பாவலர் அகத்தினிலே, நீ மட்டும் தெய்வமடி... தேடித்தேடி அலைகிறேனடி தெள்ளமுதே நீ எவ்விடம்...? அவ்விடம் சொல்லடி ஏறேடுத்து கொஞ்சம் பாரடி... எண்ணங்களை தொலைக்கிறேனடி, தொலைதூரம் நீயும் போவதுதான் என்னடி...? தீயிலெனை வாட்டுவது நீயின்றி யாரடி...? கண்ணிரெண்டும் நீயடி -என் சிந்தையிலே வேறாரடி...? கலைமகளே கண் திறந்து பாரடி... யான்பிரிந்த போதிலும் நீயெனை மறப்பாயா...? பிள்ளையெனை தாய் நீ துறப்பாயா...? வெண் தாமரை பூ வெடுத்து, செந்தாமரையடியில் அகரங்கள் நான் சொல்ல அருள்வாய் நாமகளே...                                 ✍️விசித்திரக்கவி 

மாயங்கள் சொல்லும் மர்மங்கள்

Image
காலம் நேரம் பார்த்தே காதல் மழை பொழிந்திடுமா...? அலைகடல் மோதி கரையென்ன கரைந்திடுமா...! காற்றடித்து நிழல் பறந்திடுமா...! கருமேகம் அணைத்து நிலவென்ன மயங்கிடுமா...? கொஞ்சம் மறைந்திடுமா...! கனவு சொல்லி நினைவு வந்ததா...? நினைவு சொல்லி - உன் கனவு வந்ததா...! பூவைக் கேட்டு வண்டு வந்ததா...! வண்டைக் கேட்டு - இல்லை பூப் பூத்ததா..? மின்னல் அடித்த பின்னே இடி இடிப்பது, நியாயம் தானே-இது இயல்பு தானே... உடல்பட்ட துன்பம் மனது அறியுமே..! மனதுபட்ட துன்பம் கண்கள் மட்டும் சொல்லுமே...! களவு போன இதயம் கேட்குமா...? இதயம் சொல்லி மூளையென்ன கட்டிப்போடுமா...? அன்பு வந்த பின்னே, ஆசை வருவது குற்றமா.....?              ✍விசித்திரக்கவி