கூடவே வாரேன்
ஆத்து தண்ணி -மேல
ஆலமர நிழலு
அழகா நின்னு
காத்தாற குளிக்குது...
கால் வலிக்க -என்
கவலையோடு காத்திருந்தேன்...
அத்தை மகளோ
அதிசய வெண்நிலவோ...
ஆத்தங்கரை மேல
கழுத்த வளைச்சி
இல்லாத இடுப்புல -நீ
இடையோடு இறுக்க...
செப்பு குடம் -செய்த
புண்ணியம் கண்டு
இல்லாத ஆசையெல்லாம்
எங்கிருந்தோ ஓடிவருது...
வளைஞ்சி நெளிஞ்சி -நீ
குணிஞ்சி குடம்
தூக்க ஐயோ-தாங்காதே
என் நெஞ்சம் ...
வெட்டருவா கண்ணால
திட்டாத அயிரமீனு
நாலு அங்கேயே -அண்ணம்
தண்ணியிலாம செத்துப்போகும்...
கண்ணால சாடை
மட்டும் காட்டு
குடத்து தண்ணியா
கூடவே வாரே...
என்றும் தமிழோடு
விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...