Posts

மாயங்கள் சொல்லும் மர்மங்கள்

Image
காலம் நேரம் பார்த்தே காதல் மழை பொழிந்திடுமா...? அலைகடல் மோதி கரையென்ன கரைந்திடுமா...! காற்றடித்து நிழல் பறந்திடுமா...! கருமேகம் அணைத்து நிலவென்ன மயங்கிடுமா...? கொஞ்சம் மறைந்திடுமா...! கனவு சொல்லி நினைவு வந்ததா...? நினைவு சொல்லி - உன் கனவு வந்ததா...! பூவைக் கேட்டு வண்டு வந்ததா...! வண்டைக் கேட்டு - இல்லை பூப் பூத்ததா..? மின்னல் அடித்த பின்னே இடி இடிப்பது, நியாயம் தானே-இது இயல்பு தானே... உடல்பட்ட துன்பம் மனது அறியுமே..! மனதுபட்ட துன்பம் கண்கள் மட்டும் சொல்லுமே...! களவு போன இதயம் கேட்குமா...? இதயம் சொல்லி மூளையென்ன கட்டிப்போடுமா...? அன்பு வந்த பின்னே, ஆசை வருவது குற்றமா.....?              ✍விசித்திரக்கவி 

என் அதிகாலைப் பொழுது...

Image
அதிகாலைப் பொழுதெல்லாம் அவள் முகம் பார்த்தே, அழகாய் என்னுள் விடிகிறது... வெண் நிலவு மறைந்த பின்னே பெண் நிலவு இன்னும் மயங்குது... மயக்கும் கண்கள் மயங்கிக் கிடக்குது மத்தாப்பாய் உதடுகள் அதிகம் சிரிக்குது... எதையோ சொல்லுது ஏக்கங்களை கூட்டுது ஆசையாய் கிள்ள கன்னங்கள் பூக்குது... வானவில் ரெண்டும் வாடி கிடக்குது அதை கருமேகம் சூழ்ந்து கிடக்குது... இராத்திரி நேரத்து இரகசியங்கள் கொஞ்சம் செல்லமாய் எட்டிப்பார்க்குது மீண்டும் இதயத்தை மெல்லமாய் தட்டிப்பார்க்குது... அன்னம் அசையாமல் அசந்து அழகு மயிலென அடி நெஞ்சில் மத்தளம் கொட்டுது...           ✍விசித்திரக்கவி 

காதல் வந்த பின்னே...

Image
காதல் வந்து தொட்டப் பின்னே நெஞ்சம் தாங்குமா கொஞ்சம் தூங்குமா...! இரவு வந்த பின்னே நிலவு நீங்குமா நீரில்லாமல் மீன் நித்தம் நீந்துமா...! காதல் காற்றுப்பட்டு கவிதைப் பூக்குதே உன் வாடைத்  தொட்டுத் தூக்குதே...! அழகுப் பார்த்து ஆசைத் தாக்குதே அது ஆழம் பார்த்துத் தள்ளுதே...! ஆசை முத்தம் அஞ்சாறு கேக்குதே அச்சம் வந்து மிரட்டிப் போகுதே...! இந்த இரவெல்லாம் வேர்த்துப் போகுதே என் கனவெல்லாம் நீர்த்துப் போகுதே...!                ✍விசித்திரக்கவி

சந்தேகம் வேண்டாமடி...

Image
கண்கள் ரெண்டும் கருப்பு வெள்ளை ஓவியமா...? காதல்மொழி பேசும்-என் கற்பனைக் காவியமா...! எண்ணத்திரையில் தோன்றும் வண்ணத்திரை பாவையம்மா, நீ பல்லவ நாட்டின் பதுமையம்மா...! தேன்துளி கொண்டு தேவதை நீயென வரைந்தானா...! தித்திக்கும் தமிழ் கொண்டு செவ்விதழ் படைத்தானா...! செந்நிறப்பூ கண்டு செவ்வாழை தண்டென, செந்தமிழ் நாட்டு பெண்ணுக்கு உரு கொடுத்தானா...! பூங்காற்றை பூவென பறித்து நிலவென உருக்கி, உயிர் கொடுத்தானா...! பூச்சரமாய் தொட்டுத்தானா...! தேவதைகளின் நகலென நகம் வைத்தானோ...! தேகம் எல்லாம் சந்தனத்தால் இளைத்தானோ...! இளையவளே கண்ட நாள்முதல் கனவுகளில், தொட்டுத்தொட்டு பார்க்கிறேன்...! தூக்கத்தினை தொலைக்கிறேன்...! சந்தேகம் வேண்டாமடி சந்திரனும் சொல்வாண்டி...! சாட்சியென கொள்ளடி சம்மதமென கொஞ்சம் சொல்லடி...!                    ✍விசித்திரக்கவி

நெஞ்சோரம் கொஞ்சம் கலவரம் கூட்டடி...!

Image
சித்திரங்கள் பார்க்குதடி சிலையெல்லாம் வேர்க்குதடி...! சிணுங்கி சிணுங்கி நீ சிரித்தால், சித்திரங்கள் பாவமடி... பட்டு உடையில் சிட்டென நீ வந்தால், சட்டென உடையும் என் இதயமடி...! சந்தனமும் குங்குமமும் சங்கீதம் பாடுதடி...! சித்திரை நிலவாய் தேகம் மின்னுதடி...! வளையளும் கொலுசும் என்னடி பேசுது...? உனை கண்டால்-என்  கண்களுமிங்கே கூசுது...! மல்லிகை பூவும் மனசுக்குள்ளே பாடுதோ...! மானே நீ தொட்டதால்,சிலிர்த்ததோ...! தோகை மயிலாய் ஆடுகிறேன்,பாடுகிறேன்...! பாவை நீயும் பார்த்திடடி  நெஞ்சோரம் கொஞ்சம் கலவரம் கூட்டடி...!             ✍விசித்திரக்கவி 

விசித்திர வரிகளின் சொந்தக்காரி

Image
  விசித்திர வரிகளுக்கு இவள் சொந்தக்காரி எனையாளும் மாயங்கள் தெரிந்த மந்திரக்காரி... காலமெல்லாம் என் காற்றுப் பைக்குள் கடிகார முள்ளாய் சுற்றும் தந்திரக்காரி... மூக்கு வியர்க்கும் முன் கோபக்காரி மூச்சென துடிக்கும் முல்லைபூ வாசக்காரி  நிழலென வருவாள் நிம்மதி தருவாள் நித்தம் அணைப்பாள் அனைத்தும் ஆவாள்... ஆக்கத்தின் ஆதாரமாய் -என்  ஏக்கத்தின் அச்சாரமாய் என்னுள் வாழ்கிறாள்...                  ✍விசித்திரக்கவி 

வரிகளாய் வாழ்வேனா...

Image
  தேனென இன்னிக்கும் தேவியின் கன்னங்கள் தெவிட்டாத இன்பத்தின் இதயச் சின்னங்கள்...! அல்லி இதழின் அதிசயப் பிளவில் முல்லை சிரிப்பென  முரசாய் சாட்டுகிறாள்...! நெஞ்சோரம் வேதனை கூட்டுகிறாள்-என்  விழியோரம் விளம்பரம் காட்டுகிறாள்...! விண்ணோடு வில்கொண்டு என்னோடு சமர் செய்கிறாள்...! மையுண்ட மலர்விழியால்  மண்ணோடு சாய்க்கிறாள் மடியோடு அணைத்து மனதிலே மத்தளம் கொட்டுகிறாள்...! காற்றிலே அசையும் நாணல் இடைகாட்டி நாணத்தால் நெளிகிறாள் கருநிற குழல் போர்த்தி மோகத் தீயாய் சுடுகிறாள்...! சகியின் சபரக் கண்களால் கற்பனைச் சாகரத்தில் ஆழ்த்திப் போகிறாள்...! பேதை நானும் ,  காகிதம் கொண்டு கொஞ்சம் நீந்திடுவேனா...! வரிகளாய் கொஞ்சம் வாழ்ந்திடுவேனா...!                ✍விசித்திரக்கவி