Posts

புதிய நாடு 3

Image
                  30/01/21                   ✍விசித்திரக்கவி  அன்றைய நிகழ்வு அவனது மனதிற்குள், ஓயாமல் அடிக்கும் அலைகளை விட, கடும் சுனாமியின் சீற்ற அலைகளாக அடித்து கொண்டிருந்தது... பிஞ்சு மனதிற்குள்ளும் எரிமலையும் வெடிக்கும் என்பது, அன்று அவன் கண்களில் மூலம் கர்ச்சித்தது... அசகாய சூரனெல்லாம் அடங்கி போகும் அளவுக்கு கண்களில் ஒரு மாபெரும் பார்வை... ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை அல்லவா... மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்றுள்ள சில வெள்ளை மனம் கொண்ட மாமனிதர்களும், மகத்தான அரசியல் தலைவர்களும் நிலமையை கண்டு கண்ணீர் வந்தும் காட்டாமல், வயிற்றின் பாட்டையறிந்து இயன்றதை கொடுத்து உதவினார்கள்... சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரமாட்டான் என்னும் முதுமொழிக்கேற்ப்ப, உதவியக் காரங்களின் கருணைகள் யாவும், அதை கண்கானிப்பவனின் கைக்குள் அடக்கமாகி போவதை கண்டால், கண்களே குருடாகி இருக்கலாம் என்றே மனம் கொதிக்கிறது... எழுத்துக்கள் மூலம் பார்க்கும் நமக்கே இப்படி என்றால் இழப்பில் உள்ளவனின் உள்ளத்தில் எப்படி இருக்கும்,இடி ...

புதிய நாடு 2

Image
                           ✍️விசித்திரக்கவி  எந்த நிலையிலும் தவறாமல் தன்னுடைய பொன்னான கரங்களை நீட்டி அனைவரையும் அணைக்கும் ஆதவனே அன்று, எந்த கரங்களை நீட்டி அணைப்பதென்று தெரியாமல் ஸ்தம்பித்துப்போய், காட்சிகளை கண்ட கண்களில் செந்நிறகண்ணீர் வடிய, ஆத்திரத்தின் உச்சியில் முதல் முறையாக தனக்கு தானே தீ மூட்டி தண்டனை ஏற்பதாக நினைத்து தற்கொலைக்கு முயற்சி செய்கின்ற வேளையில்... அதே சமயம் இன்னொரு புறத்தில்,நிலவாய் வேடிக்கை பார்த்த சில அரக்க குணம் படைத்த அரசியல் வாதிகளும்,அதற்கு துணை போன நட்சத்திரங்களாகிய அரசாங்க ஊழியர்களும், இரவு நடந்த கொடூரமான சம்பவத்திற்கு இன்று மாலை இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கற்பாவினை தயார் செய்கிறார்கள்... நகரம் நரகமாய் மாறி கண்களே நடுங்கும் வகையில் காட்சியழிக்கிறது... இறந்தவர்கள் ஒருபுறம், பறிகொடுத்தவர்கள் ஒரு புறம், உயிருக்கு போராடும் பிஞ்சுகள் ஒரு புறம், ஐயோ,கை குழந்தை ஒன்று பசியின் கொடுமையில் வடிக்கின்ற செங்குருதிதனை தன் செந்தாமரை இதழ்களால், தாய் எவள் என்றே தெரியாமல் தீண்டும் காட்சிதனை கண்டு கற்ச...

கண்ணாடி காகிதங்களே

Image
அந்திசாயும் நேரத்தில் ஆகாச வெண்ணிலவாய் அழகாய் வலம்வரும் பெண் நிலவோ! சிற்றுடல் தளிர்மேனியில் தங்கநிற தாவணி தைதையென சிங்கார தாளம் போடுதோ! வட்ட நிலா எட்டிப் பார்க்க சுட்டி நிலா சுற்றிப் பார்க்குதோ! மண் ணுலக மந்தரையின் சஞ்சராம் விண் ணுலக வாசிகளின் சங்கடமோ! வாடிப் போன வாடை காற்று வஞ்சியிடை தொட்டு ஆடிப் போகுதோ! கார் குழலியின் காலடி மண்ணெடுக்க கடமை மறந்து காலனவன் வருவானோ! மைவிழி மங்கையின் மாதுளையிதழ் தொட்ட தென்னாட்டு தென்றலது போதையினால் தள்ளாடுதோ! பேதை அவளும் பூங்கோதை யென புலோக மதிலே பூவாசம் வீசுகிறாள்... அந்நிலை கண்டவன் தன்னிலை மறந்து தள்ளாடும் தென்றலது பாவையிடம் சேர மயங்கிய மனமதை மயக்கிய தேவதைக்கு மனமார காதல்மண  மனமடல் அனுப்புகிறேன்... கண்ணாடி காகிதங்களே கண்ட கனவதை கனகவள்ளி கண்ணோடு கச்சிதமாய் கூறுங்கள்...                     ✍️விசித்திரக்கவி

என்னருகே நீ வேண்டும்

இரவின் மடியில் பூவாய் நானுறங்க தாலாட்டும் தேவதையாகி தித்திக்கும் தமிழோடுயெனை  மொத்தமாய்  அணைத்து கொஞ்சமாய் கொஞ்ச தேவன்மகளே  என்னருகே நீ வேண்டும்... சின்னச்சின்ன இம்சைகள் பல தந்து ஆகிம்சையாய் இம்சை யெனை செய்து குறும்பு பார்வையில் என்அரும்பு மீசையினை சீண்டிட என்னருகே நீ வேண்டும்... விழாக்கால விடியல் போல் தேவதை நீயும் திருவிழா கோலத்தில் நித்தம் எனை உன் வெட்கமழை சாரலில் நனைத்திட என்னருகே நீ வேண்டும்...             ✍விசித்திரக்கவி   

ஆண்

Image
அவனாய் அவனில்லை அவனாய் இருந்தும் அழுவதற்கு ஏனோ ஓர் வழியில்லை... ஆயிரம் கரம்கொண்ட ஆகாயச் சூரியனையும் இரு கரம்கொண்டு இருக்கி பிடிப்பான்... ஆண்மகன் தானென அடையாளம் கண்ட நாள்முதல் அவனுக்கு  நித்திரை யேது... சித்திரை வெயிலானாலும் சிலிர்க்கும் குளிரானாலும் ஆகாயம் மென்றாலும் ஆழ்கடல் திண்றாலும் துன்பமதை அறிவதில்லை துயர் துடைக்க தூயவன் தன்கரம் நீட்ட தவறியதில்லை... பிள்ளை பருவத்திலே நினைத்து நினைத்து நெஞ்சமதை நெருப்பாய் எரிய வைப்பான்... குமரப் பருவத்திலே குமரிப் பெண்ணின் இளமை குணத்திலே தன்னிலை குலைவான்... பின்பதை  நொந்து தன்னிலை பார்த்தே தாரமதை அமைப்பான்... தேடிய நாள்முதல் தேய்பிறையாய் தேடித்தேய்வான் தேடிய அனைத்தும் தீவாய்போக காண்பான்... சொந்தம் பந்தம் சொத்து சுகம் மனைவி மக்கள் சுற்றும் முற்றும் அனைத்தும் அறிந்தபின் ஆவி துடித்து கட்டையிலே போகையில் யாரேனும் கதறியழுதால் பதறி எழுவான் உள்ளதை தருவான் உள்ளத்தாலே உருகுவான்... உள்ளோர் உண்மையினை அறிந்தால் உத்தமனின் வாழ்க்கையை கண்டு காணாத கானல்நீர் போல் என்பர்...               ✍️விசித்திரக்கவி 

வசதி

Image
வசதி வசதி என்பதெல்லாம் வசதியோ... வாடகை உடம்புக்கு வற்றாதாசை வசதியோ... அங்கமெல்லாம் தங்கமாய் மின்னுவது வசதியோ... கூரைகள் மின்னும் வைர மாடமாளிகைகளில் வசிப்பது வசதியோ... வளைத்தலுக்கு ஏற்றாற்போல் மானுடர்களை வளைக்கும் பணமோ வசதி... இல்லை இல்லை இதுதான் வசதி... உறவுகளுடன் உணர்வாய்-உயிர்  உள்ளவரை வாழ்வது வசதி... உழைப்பிற்கு ஒத்தாசையாக உடல் ஒத்துழைப்பது வசதி... சிந்திக்க கிடைக்கும் கல்வி வசதி...  செயல்படுத்த கிடைக்கும் அறிவு வசதி... வெற்றிக்கு தோல்விதான் ஆகச்சிறந்த வசதி... நல்லவனோடு உலகை சேர்த்து ரசிப்பது வசதி... இறுதியில் ஆறடி இடம் கிடைத்தால் வசதியோ வசதி...        ✍விதித்திராக்கவி

காதலை மறைத்த தோழிக்கு

Image
சாயும் போதெல்லாம் தோள் கொடுத்தேன் துடிதுடிக்கும் போதெல்லாம் தூறல்மழையாய் துள்ளவைத்தேன்... மடிமீது சாய்கையில் அன்னையும் ஆனேன் எல்லைமீறும்  போது அண்ணனும் ஆனேன்... துயரமென்றால் தூக்கிப்  பிடிக்கும் தந்தையுமானேன் நிலவாய் நீயிருக்க நீல வானமானேன்... தினம் தினம் நீ பார்க்கும் பிம்பத்தின் அழகிய  கண்ணாடியு மானேன்... நீயும் நானும் நிழலும் நிஜமென நிறைந்தே வாழ்ந்தோம்... நீரோடு கயலாக அவனோடு அவளாக உயிரோடு உறவாக மனதோடு போனாய் விழி நீரோடு விதியாலே நின்றேன்... எல்லாம் நானாய் துணை யிருக்க கள்ளி நீயும்  காதலை மட்டும்  கல் மனத்தோடு மறைத்த மாயமென்ன... இருவிழியாக இருந்தாலும் பார்வையிலே பாகுபாடு என்னோடு உண்டோ... மறைத்தவள் நீயும் மறந்து போக உன் மனமறிந்த தோழன் நானும் கொஞ்சம் மறுத்துப்போகிறேன்...                 ✍விசித்திரக்கவி