Posts

விடைகள் அறியுமா...

Image
வானவிலுக்கு வயதாகுமா வெண்ணிலவு விண்மீனாகுமா...? வெற்றி சொல்லி  தோல்வி  தோழனாகுமா...? வானத்திற்கு வாசலுண்டா தென்றலுக்கு தேகமுண்டா...? பனித்துளிப் போல் -ஓர் மழைத்துளி உண்டா...? இமைமூடும் நேரம்தான் இருளின் நிறமா...? மெழுகு உருகி தீயெரிவது வரமா...? தேகங்கள் இணைவது தேன் சுகமா...? நீருண்ட மேகங்கங்கள் நினைவுகளை உண்ணுமா...? வினாவுக்கு விடைதான் சரியான பதிலா...? பதில் தெரிந்ததினால்தான் கேள்வி சரியா... தவறுக்கு தண்டனை போதும் என்றால் நீதிக்கு தான் நித்தம் நிம்மதியா...? ஆசை வருவது உணர்வு என்றால், உள்ளூற அழுவது உத்தமனின் சுகமல்லவா...? முத்தங்களில் ஓசை முத்து அறியுமா...? முத்தின் காலம் முத்தம் பொறுக்குமா...? ஓசைகள் மட்டுமே உன்னத பாசைகளா...? அசைவுகள் சொல்லி அர்த்தங்கள் புரிவதில்லையா...? கோவம் கொண்டு  கொதிக்கும் எரிமலை, தாகம் வந்தால் தண்ணீராய் மாறிடுமா...? காரணங்கள் சொல்லி கண்ணீர் கரைசேர்ந்திடுமா...? காயம்கொண்ட தழும்புகள் வேதனைகளை வென்றிடுமா...? எத்தனையோ வேதங்கள் எத்தனையோ கேள்விகள் எத்துணைதான் யாருக்கு எத்தனைநாள் பயணத்திற்கு...?              ...

என்னாசைக்கு வேலிஉன் புருவத்தின் பார்வையடி ...

Image
விண்ணோடும் மண்ணோடும் உந்தன் விழியோடும் ம்ம்ம்... எத்தனைக் கோடி விளங்காத மர்மங்களடி... மல்லிகை தேசத்து பெண் நிலவே மயக்கத்தினைக் கூட்டியப்பின்  தயக்கம் ஏனடி...! ஆசை மயிலே அழகிய எழிலே உன் மச்சம் கிள்ளி என் மனசெல்லாம் பூக்குதடி...! புது வெள்ளி பொன் ரதமே வளை கொஞ்சும் குவளைச் சரமே... மின்மினி கண்களால் மின்னல் அடித்து, அனல்மேல் தள்ளி சாரலாய் பொழிகிறாய்... போதும் போதுமடி இனியும் தாங்காது வண்ணத்து பூச்சிக்கு வானம் நீயடி.. என்னாசைக்கு வேலி உன் புருவத்தின் பார்வையடி ... விண்ணோடும் மண்ணோடும் உந்தன் விழியோடும் ம்ம்ம்... எத்தனைக் கோடி விளங்காத மர்மங்களடி...     -விசித்திரக்கவி   

கண்ணுறங்கு

Image
சின்ன பூவே-என்  சிங்கார கண்ணே சீக்கிரம் கண்ணுறங்கு...-எங் காதலியே கண்ணுறங்கு... கனவுகள் பாடி நினைவுகள் ஆட சித்திரை நிலவே நித்திரை கொள்ள சீக்கிரம் கண்ணுறங்கு... சின்ன பூவே-என்  சிங்கார கண்ணே சீக்கிரம் கண்ணுறங்கு...-எங் காதலியே கண்ணுறங்கு... மடிமீது சாய்ந்து மனதோடு பாய்ந்து மந்தாரை பூவாய் மானே கண்ணுறங்கு மானே நீ கண்ணுறங்கு... உன் நினைவா ஊஞ்சல் ஒன்னு உள்ளே இருக்கு, உசுருக்குள்ளே ஊடுருவி உருவம் கொஞ்சம்தான்  நீ மறந்து, தாலேலோ பாடுறேன் தங்கமே நீ கண்ணுறங்கு... சின்ன பூவே-என்  சிங்கார கண்ணே சீக்கிரம் கண்ணுறங்கு...-எங் காதலியே கண்ணுறங்கு... காலம் தடுக்கி கால் உடையாது காயும் கண்ணீரில் கப்பல் போகாது என் கண்மணியே கண்ணுறங்கு... கண்ணுறங்கு வேளையிலே என் கண்மூடி போகட்டும் காலம் நேரம் நீ மறந்து காலமெல்லாம் நீ வாழவேனும்... சீக்கிரம் கண்ணுறங்கு... சின்ன பூவே-என்  சிங்கார கண்ணே சீக்கிரம் கண்ணுறங்கு...-எங் காதலியே கண்ணுறங்கு...           -விசித்திரக்கவி   

கண்ணீருக்கு இவர்களே பொறுப்பு...

Image
(ஆண்) உசுருக் குள்ள என்னை வச்சி ஒத்தையில போற புள்ள ஒத்தையடி பாதையில உச்சி வரும் வேளையில பாதையது  நீளுமடி... (பெண்)  போனதெல்லாம் போகட்டும் போறவழி பூக்கட்டும் பாதியில வந்தவனே ஆதியென ஆனதென்ன...? (ஆண்) மீதியின்னு ஒன்னுமில்லை பஞ்சம் என்னும் பார்வையில என்நெஞ்சம் ஒன்னுகல்லுயில்ல புத்திகெட்டு போகையில புத்துயிரா வந்தவளே புலம்பிகிட்டு போறதென்ன...? (பெண்) பாசமென்னும் பாதையில பாவமுன்னு ஒன்னுமில்ல பரதேசம் போனாலும் இந்த  பாவிமகளை மறக்காதே ராசா... உசுருக்குள் பூட்டிகிட்டேன்  உன்னோடு முட்டிகிட்டேன் ஊரும் வந்துடுச்சி உள்ளுகுள்ள போ... ராசா.... (ஆண்) காலநேரம் தூரமில்ல கடவுள்கூட தோதாயில்ல காதலெனும் நம்மபுள்ள  காத்தோடு வாழட்டும் புள்ள... (ஆண்) உசுருக் குள்ள என்னை வச்சி ஒத்தையில போற புள்ள ஒத்தையடி பாதையில உச்சி வரும் வேளையில பாதையது  நீளுமடி...                  விசித்திரக்கவி 

ஐயனே...

Image
அப்பனே... ஆருரானை ஆட்கொண்ட அறிய அருளே அப்பரின் அன்பனே சுந்தரனே சதாசிவா... இப்பிறவியில் இல்லாத பொல்லாத பிழையெல்லாம் கொள்ளாத அளவு அறிவிழந்து செய்தேனே... உள்ளம் வேகுதே-உன் கருணை தேடுதே சிவசிவா என்கிறேன் சீக்கிரம் வாருமையா... வெண்நிற விடையேறி பித்தனே பித்தனெனை சித்தனென சிந்தை தெளிய நாதனே நல்லருள் புரிவாய்... நாயகனே நாயினன் நானே அம்பலத்தானே என்னையாக்கியது நீதானே நஞ்சனே நாகம் கொண்ட பிஞ்சனே பிதற்றுகிறேன் நானே... ஐயனே அல்லும் பகலும் எனை ஆள்பவனே அடி நெஞ்சில் ஆழ்ந்தவனே அடியாரின் ஆண்டவனே... காட்சிகள் ரெண்டினை கண்டேன் கரமொன்றை நள்ளிரவில் கொண்டேன் நந்தியினை நாதனெனே நானும் நெஞ்சினிலே அடைத்தேன்... சிவாயநம... சிவாயநம... சிவசிவ என்றேன் அபயமென உபயம் தந்தான் உள்ளமெல்லாம் தேனூற தேவனே ஜீவனானான்...                  ✍️விசித்திரக்கவி 

காலனே கேளடா...

Image
கண் மூடி கண்ணுறங்க போகிறேன் காலனே காவலுக்கு பக்கத்தில் வாருமடா... கண்ணிமை அசையாமல் கண் விழிக்கும் வரை சிவசிவா என்றே ஜீவனை காத்திடு... நீயும் நானும் நடமாடும் சவமடா சிவமே நம்மில் சக்தியென கூறடா...            விசித்திரக்கவி 

தமிழே நீயும்...

Image
எட்டய புரத்தானும் எட்டாவதாக பிறந்தவனும் கவிஞனாய் ஆகும்போது ஏழை வீட்டில் பிறந்த நானும் கவிஞன் இல்லையா... வார்த்தைகளையும் கற்பனைகளையும் வாழ்வியலோடு வளைத்து வர்ணங்களை கூட்டும் கம்பனையும் வள்ளுவனையும்-போல் நானும் தமிழை நேசிக்கலையா... இல்லாத வீட்டில் பொல்லாத பிள்ளை பிறந்தா னென்று தமிழே நீயும் தாயாகலையா...! தவிக்கும் போதெல்லாம் தாகத்தினை தீர்க்கலையா...! தேன் கலந்து தாய்தமிழை நீ ஊட்டலையா...! செந்தமிழே சிந்தனையில் வைத்தேன் செந்தீயில் தத்தளிக்க விட்டாயோ...? அறிந்ததெல்லாம் தமிழே தமிழே போற்றுவதெல்லாம் உன் புகழே...! இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளையென தாயே நீயும் எனை தள்ளிப் போனாயோ...! ஆவென...ஓவென நான் அழுது உயிரும் உடலும் வியர்த்தால் தாயே நீயும் தாங்கிடுவாயோ...! பாண்டிய நாட்டு-எம்  பவளக் கொடியே பக்தனாய் நான் வாழ பாரபட்சம் ஏனடி...?              -விசித்திரக்கவி