கண்ணீருக்கு இவர்களே பொறுப்பு...

(ஆண்)
உசுருக் குள்ள
என்னை வச்சி
ஒத்தையில போற புள்ள
ஒத்தையடி பாதையில
உச்சி வரும் வேளையில
பாதையது  நீளுமடி...

(பெண்) 
போனதெல்லாம் போகட்டும்
போறவழி பூக்கட்டும்
பாதியில வந்தவனே
ஆதியென ஆனதென்ன...?

(ஆண்)
மீதியின்னு ஒன்னுமில்லை
பஞ்சம் என்னும் பார்வையில
என்நெஞ்சம் ஒன்னுகல்லுயில்ல
புத்திகெட்டு போகையில
புத்துயிரா வந்தவளே
புலம்பிகிட்டு போறதென்ன...?

(பெண்)
பாசமென்னும் பாதையில
பாவமுன்னு ஒன்னுமில்ல
பரதேசம் போனாலும் இந்த 
பாவிமகளை மறக்காதே ராசா...

உசுருக்குள் பூட்டிகிட்டேன் 
உன்னோடு முட்டிகிட்டேன்
ஊரும் வந்துடுச்சி
உள்ளுகுள்ள போ... ராசா....

(ஆண்)
காலநேரம் தூரமில்ல
கடவுள்கூட தோதாயில்ல
காதலெனும் நம்மபுள்ள 
காத்தோடு வாழட்டும் புள்ள...

(ஆண்)
உசுருக் குள்ள
என்னை வச்சி
ஒத்தையில போற புள்ள
ஒத்தையடி பாதையில
உச்சி வரும் வேளையில
பாதையது  நீளுமடி...

                 விசித்திரக்கவி 

Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்