பால் நிலவு

செக்கசிவந்த செவ்வானமும் 
சிவந்து போகும் 
செவ்விதழ் கொண்டவளே 
வட்ட பொட்டழகி... 

வஞ்சமில்ல வஞ்சிக்
கொடிஇடை அழகியோ 
கண்டாலே போதையேற்றும் 
கஞ்சாக் கண்ணழகி... 

கருமேக காட்டாறு 
கூந்தலுக்கு சொந்தக்காரி 
அவள் செங்கரும்பு உதட்டுக்கு -நான்  
சிட்டெறுப்பு காவக்காரன்... 

பூ மேனியிலே 
பொன்கருப்பு சாறெடுக்க 
பால் நிலவில் 
பாய் போடலாம் வா... 


 


Comments

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்