காட்சி தருவாளா...!

                    03/02/21
                    ✍விசித்திரக்கவி 

கவிதைகள் ஆயிரம் கண்டேன்
அங்கேதான் அவளை கண்டேன்
மொழிகள் நூறினை தந்தாள்-என்
வார்த்தைகளை பறித்துக் கொண்டாள்...

அழகே போர்க்களம் போவது -போல்
சின்ன நடையே படையாக
சிங்கார படையே நடையாக
தேவதையாய் பவனி செல்கிறாள்...

அவளது சிலிர்த்த தேகத்தால்-எனை 
கொஞ்சம் சிறை வைக்கிறாள்
சின்னச் சின்ன சிலுங்களில்
அதிகம் ஆட்டி வைக்கிறாள்...

பால்நிலவாய் பட்டாடை கட்டி-எனை
பார்த்துப் பார்த்து சிரிக்கிறாள்
பக்குவமாய் பார்த்தே ஈட்டி-பார்வையினை
பாதகத்தி குத்தி போகிறாள்...

காயம்பட்ட வேகத்தில் பாவப்பட்ட-எனை
பவள பல்லக்கில் கடத்துகிறாள்
கடத்தியவளே காதல் மொழிபேசி
காற்றாடியாய் சுற்ற வைக்கிறாள்...

அவளையே சுற்றிச்சுற்றி வருகிறேன் -அவள்
கண்பார்த்து பேச முயல்கிறேன்...
மான்குட்டி விரல் பட்டால்-நானோ 
தோகை மயிலாய் ஆடுகிறேன்...

முயல் குட்டியின் முன்னழகில்
முழுவதுமாய் மூச்சிழந்து போகிறேன்
பின்னழகின்  கூந்தல் வாசம்பட்டே
கொஞ்சம் சுவாசம் கொள்கிறேன்...

இனி...
கனவிலே வாழ்ந்தது போதும் - அவள் 
என் கண்ணெதிரே வருவாளா...!
காற்குழலி காட்சி தருவாளா...!
கனவுகளை கலைத்து காத்திருக்கிறேன்...














Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்