விடிய போகுது வா...
புதியதொரு காலை-இனி
புதியதாய் பூக்கட்டும்
புதுமலரின் வாசம்
பூலோகமெல்லாம் வீசட்டும்...
வெற்றிநடை போட-நீ
வீரத்தோடு விளையாடு
நம்பிக்கையொன்றே நிரந்தரம் -இங்கே
நாளுமது சுதந்திரம்...
உன்பெயரை சுமக்க
இமயம் ஏங்கிகிடக்குது
உன்வெற்றியை கொண்டாடவே
கடல் ஏழும் காத்துக்கிடக்குது...
வாழ்க்கை ஒருமுறை தான்
வாழ்ந்தே தீர்ப்போம் வா...
✍️விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...