விழிகள்
மானாக துள்ளும்
மயிலோட மச்சவிழி
பார்வை ரெண்டும்
மச்சான மயக்குதடி...
பவளக்கொடி கூந்தலுக்கு
முல்லைக்கொடி முந்திக்கிச்சி...
மல்லிகைச் செடியோ
மனசுகுள்ள கதறுதடி...
பட்டுப் புடவையில
பட்டாம்பூச்சி பறக்குதடி...
நானோ நூலறுந்த
பட்டம் போல திரியுற...
அதிகாலை பனி -போல்
நெஞ்சமெல்லாம் குளிருது...
நினைவெல்லாம் அவளையே -சுற்றி
சுற்றி வருகுது...

Super
ReplyDelete