உழைத்து உழைத்தே உருகுலைந்து போகிறோம்...


உழைத்து உழைத்தே
உருகுலைந்து போகிறோம்
ஒருபிடி சோத்துக்கே 
ஓயாமல் சுமக்கிறோம்...

அன்று முதல்
இன்று வரை
உழைத்தவனே ஓடாய்
உடைந்து போகிறோம்...

முதலாளி தத்துவம்
முதலைபோல் ஆகுது...
வரிகள் ஏறுது-அது
வாய்க்கால் வரை போகுது ...

உழவனே உழவுக்கு
பயந்து ஓடுகிறன்
நடப்பதையெண்ணி நாளும்
வேதனையிலே வாழ்கிறான்...

அரசு சட்டமெல்லாம்
தரிசாய் போகுது 
உழைத்தவன் குடும்பத்தில்
தாலி மட்டுமே எஞ்சுது...

       ✍விசித்திரக்கவி 





Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்