ஓர் நாள் ஊரடங்கு
ஓர்நாள் ஊரடங்கென்றால்
எங்கள் வயிறடங்கிடுமா...?
ரோட்டோரா வாழ்க்கையில்
ரொட்டித் துண்டாவது கிடைத்திடுமா...?
மூன்று வேளையில்
ஓர் வேளையாவது
இன்று உண்டிடுவோமா-இல்லை
பசியிலே உறங்கிடுவோமா...?
உழைத்தே உண்கிறோம்
உணர்வுகளை துறந்து,
சிலநேரம் பசியின் உச்சத்தில்
கைகளை ஏந்துகின்றோம்...
உரிமைகள் வேண்டாம்
உணவாவது வேண்டும்
கிடைத்திடுமா...!
நாங்களும் பசி மறப்போமா...
✍️விசித்திரக்கவி
அருமை
ReplyDelete