Posts

மனிதனாய் பிறந்து விட்டேன்...

Image
யாரையும் வெறுப்பதில்லை-நான்  எவரையும் மறப்பதில்லை வேண்டாமென்றெனை ஒதுக்கிவிட்டால் உயிரே போயினும் ஏற்பதில்லை... அள்ளித் தந்தவர்களை எள்ளி ஆடுவதில்லை தள்ளிப் போனாலும் கொல்லி வைத்துப்போவதில்லை... துள்ளிப் போனவர்களே போய் விடுங்கள் தத்தளித்து கிடக்கிறேன் தடம் மாறியும் வாராதீர்... உள்ளொன்றும் வெளியொன்றும் விலை பேசி எதைதேடிப் பிடித்துவிட்டாய் -உன்  மதிப்பையும் இழந்து விட்டாய்... மனிதனாய் பிறந்து விட்டேன் தனிமரமாய் நின்று விட்டேன் காலங்களே சொல்லுங்கள் இனியென்  கல்லறையாவது பூக்கட்டும்... -விசித்திரக்கவி 

எழுந்து வாடா என் தோழா...

Image
உரிமைகளை விற்று ஊமையாகிக் கொண்டிருக்கிறாய் உணர்வுகளைத் தொலைத்து ஊணமாகித் தவிக்கிறாய்... உழைப்பை மறந்து ஊதாரியாய் திறிகிறாய் உரக்கப் பேசினாலே-உன் நரம்பேயுனைக் கொன்றுவிடும்  தொடுதிரையில் தொட்டபடியே தூங்கிக் கிடக்கிறாய் தூசுகள் படிந்து  துரும்பாய் உதிர்கிறாய்... உதிரத்தின் வேகத்தில் அதிரும் இளமையடா  ஆகாய வீதியில்-இங்கு  ஆழ்கடலே பாயுமடா... எழுந்து வாடா என் தோழா  ஏணிகள் தேவையில்லை துணிவுகள் போதும்... -விசித்திரக்கவி...

விடைகள் அறியுமா...

Image
வானவிலுக்கு வயதாகுமா வெண்ணிலவு விண்மீனாகுமா...? வெற்றி சொல்லி  தோல்வி  தோழனாகுமா...? வானத்திற்கு வாசலுண்டா தென்றலுக்கு தேகமுண்டா...? பனித்துளிப் போல் -ஓர் மழைத்துளி உண்டா...? இமைமூடும் நேரம்தான் இருளின் நிறமா...? மெழுகு உருகி தீயெரிவது வரமா...? தேகங்கள் இணைவது தேன் சுகமா...? நீருண்ட மேகங்கங்கள் நினைவுகளை உண்ணுமா...? வினாவுக்கு விடைதான் சரியான பதிலா...? பதில் தெரிந்ததினால்தான் கேள்வி சரியா... தவறுக்கு தண்டனை போதும் என்றால் நீதிக்கு தான் நித்தம் நிம்மதியா...? ஆசை வருவது உணர்வு என்றால், உள்ளூற அழுவது உத்தமனின் சுகமல்லவா...? முத்தங்களில் ஓசை முத்து அறியுமா...? முத்தின் காலம் முத்தம் பொறுக்குமா...? ஓசைகள் மட்டுமே உன்னத பாசைகளா...? அசைவுகள் சொல்லி அர்த்தங்கள் புரிவதில்லையா...? கோவம் கொண்டு  கொதிக்கும் எரிமலை, தாகம் வந்தால் தண்ணீராய் மாறிடுமா...? காரணங்கள் சொல்லி கண்ணீர் கரைசேர்ந்திடுமா...? காயம்கொண்ட தழும்புகள் வேதனைகளை வென்றிடுமா...? எத்தனையோ வேதங்கள் எத்தனையோ கேள்விகள் எத்துணைதான் யாருக்கு எத்தனைநாள் பயணத்திற்கு...?              ...

என்னாசைக்கு வேலிஉன் புருவத்தின் பார்வையடி ...

Image
விண்ணோடும் மண்ணோடும் உந்தன் விழியோடும் ம்ம்ம்... எத்தனைக் கோடி விளங்காத மர்மங்களடி... மல்லிகை தேசத்து பெண் நிலவே மயக்கத்தினைக் கூட்டியப்பின்  தயக்கம் ஏனடி...! ஆசை மயிலே அழகிய எழிலே உன் மச்சம் கிள்ளி என் மனசெல்லாம் பூக்குதடி...! புது வெள்ளி பொன் ரதமே வளை கொஞ்சும் குவளைச் சரமே... மின்மினி கண்களால் மின்னல் அடித்து, அனல்மேல் தள்ளி சாரலாய் பொழிகிறாய்... போதும் போதுமடி இனியும் தாங்காது வண்ணத்து பூச்சிக்கு வானம் நீயடி.. என்னாசைக்கு வேலி உன் புருவத்தின் பார்வையடி ... விண்ணோடும் மண்ணோடும் உந்தன் விழியோடும் ம்ம்ம்... எத்தனைக் கோடி விளங்காத மர்மங்களடி...     -விசித்திரக்கவி   

கண்ணுறங்கு

Image
சின்ன பூவே-என்  சிங்கார கண்ணே சீக்கிரம் கண்ணுறங்கு...-எங் காதலியே கண்ணுறங்கு... கனவுகள் பாடி நினைவுகள் ஆட சித்திரை நிலவே நித்திரை கொள்ள சீக்கிரம் கண்ணுறங்கு... சின்ன பூவே-என்  சிங்கார கண்ணே சீக்கிரம் கண்ணுறங்கு...-எங் காதலியே கண்ணுறங்கு... மடிமீது சாய்ந்து மனதோடு பாய்ந்து மந்தாரை பூவாய் மானே கண்ணுறங்கு மானே நீ கண்ணுறங்கு... உன் நினைவா ஊஞ்சல் ஒன்னு உள்ளே இருக்கு, உசுருக்குள்ளே ஊடுருவி உருவம் கொஞ்சம்தான்  நீ மறந்து, தாலேலோ பாடுறேன் தங்கமே நீ கண்ணுறங்கு... சின்ன பூவே-என்  சிங்கார கண்ணே சீக்கிரம் கண்ணுறங்கு...-எங் காதலியே கண்ணுறங்கு... காலம் தடுக்கி கால் உடையாது காயும் கண்ணீரில் கப்பல் போகாது என் கண்மணியே கண்ணுறங்கு... கண்ணுறங்கு வேளையிலே என் கண்மூடி போகட்டும் காலம் நேரம் நீ மறந்து காலமெல்லாம் நீ வாழவேனும்... சீக்கிரம் கண்ணுறங்கு... சின்ன பூவே-என்  சிங்கார கண்ணே சீக்கிரம் கண்ணுறங்கு...-எங் காதலியே கண்ணுறங்கு...           -விசித்திரக்கவி   

கண்ணீருக்கு இவர்களே பொறுப்பு...

Image
(ஆண்) உசுருக் குள்ள என்னை வச்சி ஒத்தையில போற புள்ள ஒத்தையடி பாதையில உச்சி வரும் வேளையில பாதையது  நீளுமடி... (பெண்)  போனதெல்லாம் போகட்டும் போறவழி பூக்கட்டும் பாதியில வந்தவனே ஆதியென ஆனதென்ன...? (ஆண்) மீதியின்னு ஒன்னுமில்லை பஞ்சம் என்னும் பார்வையில என்நெஞ்சம் ஒன்னுகல்லுயில்ல புத்திகெட்டு போகையில புத்துயிரா வந்தவளே புலம்பிகிட்டு போறதென்ன...? (பெண்) பாசமென்னும் பாதையில பாவமுன்னு ஒன்னுமில்ல பரதேசம் போனாலும் இந்த  பாவிமகளை மறக்காதே ராசா... உசுருக்குள் பூட்டிகிட்டேன்  உன்னோடு முட்டிகிட்டேன் ஊரும் வந்துடுச்சி உள்ளுகுள்ள போ... ராசா.... (ஆண்) காலநேரம் தூரமில்ல கடவுள்கூட தோதாயில்ல காதலெனும் நம்மபுள்ள  காத்தோடு வாழட்டும் புள்ள... (ஆண்) உசுருக் குள்ள என்னை வச்சி ஒத்தையில போற புள்ள ஒத்தையடி பாதையில உச்சி வரும் வேளையில பாதையது  நீளுமடி...                  விசித்திரக்கவி 

ஐயனே...

Image
அப்பனே... ஆருரானை ஆட்கொண்ட அறிய அருளே அப்பரின் அன்பனே சுந்தரனே சதாசிவா... இப்பிறவியில் இல்லாத பொல்லாத பிழையெல்லாம் கொள்ளாத அளவு அறிவிழந்து செய்தேனே... உள்ளம் வேகுதே-உன் கருணை தேடுதே சிவசிவா என்கிறேன் சீக்கிரம் வாருமையா... வெண்நிற விடையேறி பித்தனே பித்தனெனை சித்தனென சிந்தை தெளிய நாதனே நல்லருள் புரிவாய்... நாயகனே நாயினன் நானே அம்பலத்தானே என்னையாக்கியது நீதானே நஞ்சனே நாகம் கொண்ட பிஞ்சனே பிதற்றுகிறேன் நானே... ஐயனே அல்லும் பகலும் எனை ஆள்பவனே அடி நெஞ்சில் ஆழ்ந்தவனே அடியாரின் ஆண்டவனே... காட்சிகள் ரெண்டினை கண்டேன் கரமொன்றை நள்ளிரவில் கொண்டேன் நந்தியினை நாதனெனே நானும் நெஞ்சினிலே அடைத்தேன்... சிவாயநம... சிவாயநம... சிவசிவ என்றேன் அபயமென உபயம் தந்தான் உள்ளமெல்லாம் தேனூற தேவனே ஜீவனானான்...                  ✍️விசித்திரக்கவி 

காலனே கேளடா...

Image
கண் மூடி கண்ணுறங்க போகிறேன் காலனே காவலுக்கு பக்கத்தில் வாருமடா... கண்ணிமை அசையாமல் கண் விழிக்கும் வரை சிவசிவா என்றே ஜீவனை காத்திடு... நீயும் நானும் நடமாடும் சவமடா சிவமே நம்மில் சக்தியென கூறடா...            விசித்திரக்கவி 

தமிழே நீயும்...

Image
எட்டய புரத்தானும் எட்டாவதாக பிறந்தவனும் கவிஞனாய் ஆகும்போது ஏழை வீட்டில் பிறந்த நானும் கவிஞன் இல்லையா... வார்த்தைகளையும் கற்பனைகளையும் வாழ்வியலோடு வளைத்து வர்ணங்களை கூட்டும் கம்பனையும் வள்ளுவனையும்-போல் நானும் தமிழை நேசிக்கலையா... இல்லாத வீட்டில் பொல்லாத பிள்ளை பிறந்தா னென்று தமிழே நீயும் தாயாகலையா...! தவிக்கும் போதெல்லாம் தாகத்தினை தீர்க்கலையா...! தேன் கலந்து தாய்தமிழை நீ ஊட்டலையா...! செந்தமிழே சிந்தனையில் வைத்தேன் செந்தீயில் தத்தளிக்க விட்டாயோ...? அறிந்ததெல்லாம் தமிழே தமிழே போற்றுவதெல்லாம் உன் புகழே...! இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளையென தாயே நீயும் எனை தள்ளிப் போனாயோ...! ஆவென...ஓவென நான் அழுது உயிரும் உடலும் வியர்த்தால் தாயே நீயும் தாங்கிடுவாயோ...! பாண்டிய நாட்டு-எம்  பவளக் கொடியே பக்தனாய் நான் வாழ பாரபட்சம் ஏனடி...?              -விசித்திரக்கவி 

ஆவணித் திங்கள்-என்ஐயம் தீருமா...!

Image
கண்ணா...! கண்ணா...! கண்ணெல்லாம் பாடுது நெஞ்சமெல்லாம் வேகுது அங்கமெல்லாம் அழுகுது உன்குரல் திசைகேட்டு செவிகள் ரெண்டும் ஓடுது, உயிரும் வாடுது-அது உள்ளூற உனை தேடுது... ஆறுதல் சொல்ல ஆகாயம் விட்டு வாராயோ...! காற்றை கரைத்து கீதமென சொல்வாயோ...! மாயங்கள் பல புரிந்து மானிடனெனை மயக்குவாயோ...? மாயவனே மணிவண்ணா...? பாரதம் கொடுத்தவனே பரந்தாமா...! பாவியெனை பாரடா பாரெல்லாம் கேளடா, பட்ட துன்பம் பாதி தருகிறேன்... பாற்கடலே கதியென பாம்பே பாய்யென பக்கத்தில் தேவியென பாதி உறக்கமேனடா...? ஆட்டி வைப்பவனே-நீ ஆட்டத்தில் வேடிக்கையா..! ஆடுபவன் எல்லாம் உன் கைப்பாகையா...? ஆட்டம் முடியுமா-அது அது அரங்கமேறுமா...? ஆவணித் திங்கள்-என் ஐயம் தீருமா...!                         ✍️விசித்திரக்கவி 

கள்ளியாய் வில்லியாய் சாகசங்கள் போதுமடி...

Image
வெண்சங்கு நீரெடுத்து விண்மீனை பிரித்தெடுத்து தேன்கலந்து கொஞ்சம் தேகத்துக்கு உருகொடுத்தானா...! வெண்ணிலவை விளக்காய் வைத்து அங்கமெல்லாம் தங்கமென அளந்து அளந்து அசைவு கொடுத்தானா...! இசைக்கு இசைவாய் இடைக்கு கொஞ்சம் இசைவு இசைந்து இன்னிசை மீட்டுக்கிறாய்... கண்களால் மத்தளம் கொட்டுக்கிறாய், காற்றைத் தொட்டு களவரம் செய்து கைதியாய் சிறையிலடைக்கிறாய்... சின்னச் சின்ன குறும்புகள் செய்கிறாய் செவ்வானத்தில் செம்மீனை ஏனடி தேடுகிறாய்...! செய்வதெல்லாம் செவ்வனே செய்து வைக்கிறாய், செவ்வந்தி பூக்களுக்குள் சண்டையினை மூட்டுகிறாய்...! புல்லாங்குழலாய் உன் குரல் கேட்டு பூக்கள் எல்லாம் பூப்படைந்து பூக்கிறது....! காய்க்காமலே அது  கனி ஆகிறது... கள்ளியாய் வில்லியாய் சாகசங்கள் போதுமடி என் சாதாரண கண்கள் சத்தியம் தாங்காது...                   விசித்திரக்கவி 

சில நேரம்....

Image
(சில நேரம்....) சின்னச் சின்ன கண்ணீர் துளிகளை நிம்மதியென நெஞ்சம் கொஞ்சம் ஏங்குமே... (சில நேரம்....) சொல்ல வரும் வார்த்தைகளை சொல்லாமல் நாடு கடத்த மவுனம் தோன்றுமே... (சில நேரம்....) விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து விதியை நொந்து மனம் பாடுமே... (சில நேரம்....) மயக்கம் கொள்ளும் மானிடர் மத்தியில் மாயவித்தை காட்டுமே மனசாட்சி அதிகமது குத்துமே... (சில நேரம்....) சில கவிதைகள் பல நேரம் காகிதங்களை கண்ணீரில் கரைய வைக்குமே... (சில நேரம்....) எட்டிய பொருள் கிட்டாமல் போனால் நெஞ்சத்தை முட்டுமே துக்கத்தை தூண்டுமே... (சில நேரம்....) தேடித்தேடி சேர்த்ததெல்லாம் தேளாய் கொட்டுமே தேன் கூட தினம் கசக்குமே... (சில நேரம்....) நிழலும் நிம்மதியில் நித்தம் வாழுமே நிஜம் மட்டும் சோதனையில் வாழுமே... (சில நேரம்....) சில நேரம் பல நேரம் நரகத்தில் நாடோடியாய் நடக்க கற்றுத் தருமே... (சில நேரம்....) அந்நேரம் எந்நேரமென இந்நேரம் சில உள்ளங்கள் உள்ளூற பார்த்திருக்குமே...                        _விசித்திரக்கவி    

கலைமகளே பாரடி...

Image
மாயையில் விழுந்தேனடி மயக்கங்கள் கொண்டேனடி... மாமனிதர் மத்தியிலே, மடையனென தவழ்ந்தேனடி... அறிந்ததென ஆயிரமும் பாவங்கள் தானடி... பாவலர் அகத்தினிலே, நீ மட்டும் தெய்வமடி... தேடித்தேடி அலைகிறேனடி தெள்ளமுதே நீ எவ்விடம்...? அவ்விடம் சொல்லடி ஏறேடுத்து கொஞ்சம் பாரடி... எண்ணங்களை தொலைக்கிறேனடி, தொலைதூரம் நீயும் போவதுதான் என்னடி...? தீயிலெனை வாட்டுவது நீயின்றி யாரடி...? கண்ணிரெண்டும் நீயடி -என் சிந்தையிலே வேறாரடி...? கலைமகளே கண் திறந்து பாரடி... யான்பிரிந்த போதிலும் நீயெனை மறப்பாயா...? பிள்ளையெனை தாய் நீ துறப்பாயா...? வெண் தாமரை பூ வெடுத்து, செந்தாமரையடியில் அகரங்கள் நான் சொல்ல அருள்வாய் நாமகளே...                                 ✍️விசித்திரக்கவி 

மாயங்கள் சொல்லும் மர்மங்கள்

Image
காலம் நேரம் பார்த்தே காதல் மழை பொழிந்திடுமா...? அலைகடல் மோதி கரையென்ன கரைந்திடுமா...! காற்றடித்து நிழல் பறந்திடுமா...! கருமேகம் அணைத்து நிலவென்ன மயங்கிடுமா...? கொஞ்சம் மறைந்திடுமா...! கனவு சொல்லி நினைவு வந்ததா...? நினைவு சொல்லி - உன் கனவு வந்ததா...! பூவைக் கேட்டு வண்டு வந்ததா...! வண்டைக் கேட்டு - இல்லை பூப் பூத்ததா..? மின்னல் அடித்த பின்னே இடி இடிப்பது, நியாயம் தானே-இது இயல்பு தானே... உடல்பட்ட துன்பம் மனது அறியுமே..! மனதுபட்ட துன்பம் கண்கள் மட்டும் சொல்லுமே...! களவு போன இதயம் கேட்குமா...? இதயம் சொல்லி மூளையென்ன கட்டிப்போடுமா...? அன்பு வந்த பின்னே, ஆசை வருவது குற்றமா.....?              ✍விசித்திரக்கவி 

என் அதிகாலைப் பொழுது...

Image
அதிகாலைப் பொழுதெல்லாம் அவள் முகம் பார்த்தே, அழகாய் என்னுள் விடிகிறது... வெண் நிலவு மறைந்த பின்னே பெண் நிலவு இன்னும் மயங்குது... மயக்கும் கண்கள் மயங்கிக் கிடக்குது மத்தாப்பாய் உதடுகள் அதிகம் சிரிக்குது... எதையோ சொல்லுது ஏக்கங்களை கூட்டுது ஆசையாய் கிள்ள கன்னங்கள் பூக்குது... வானவில் ரெண்டும் வாடி கிடக்குது அதை கருமேகம் சூழ்ந்து கிடக்குது... இராத்திரி நேரத்து இரகசியங்கள் கொஞ்சம் செல்லமாய் எட்டிப்பார்க்குது மீண்டும் இதயத்தை மெல்லமாய் தட்டிப்பார்க்குது... அன்னம் அசையாமல் அசந்து அழகு மயிலென அடி நெஞ்சில் மத்தளம் கொட்டுது...           ✍விசித்திரக்கவி 

காதல் வந்த பின்னே...

Image
காதல் வந்து தொட்டப் பின்னே நெஞ்சம் தாங்குமா கொஞ்சம் தூங்குமா...! இரவு வந்த பின்னே நிலவு நீங்குமா நீரில்லாமல் மீன் நித்தம் நீந்துமா...! காதல் காற்றுப்பட்டு கவிதைப் பூக்குதே உன் வாடைத்  தொட்டுத் தூக்குதே...! அழகுப் பார்த்து ஆசைத் தாக்குதே அது ஆழம் பார்த்துத் தள்ளுதே...! ஆசை முத்தம் அஞ்சாறு கேக்குதே அச்சம் வந்து மிரட்டிப் போகுதே...! இந்த இரவெல்லாம் வேர்த்துப் போகுதே என் கனவெல்லாம் நீர்த்துப் போகுதே...!                ✍விசித்திரக்கவி

சந்தேகம் வேண்டாமடி...

Image
கண்கள் ரெண்டும் கருப்பு வெள்ளை ஓவியமா...? காதல்மொழி பேசும்-என் கற்பனைக் காவியமா...! எண்ணத்திரையில் தோன்றும் வண்ணத்திரை பாவையம்மா, நீ பல்லவ நாட்டின் பதுமையம்மா...! தேன்துளி கொண்டு தேவதை நீயென வரைந்தானா...! தித்திக்கும் தமிழ் கொண்டு செவ்விதழ் படைத்தானா...! செந்நிறப்பூ கண்டு செவ்வாழை தண்டென, செந்தமிழ் நாட்டு பெண்ணுக்கு உரு கொடுத்தானா...! பூங்காற்றை பூவென பறித்து நிலவென உருக்கி, உயிர் கொடுத்தானா...! பூச்சரமாய் தொட்டுத்தானா...! தேவதைகளின் நகலென நகம் வைத்தானோ...! தேகம் எல்லாம் சந்தனத்தால் இளைத்தானோ...! இளையவளே கண்ட நாள்முதல் கனவுகளில், தொட்டுத்தொட்டு பார்க்கிறேன்...! தூக்கத்தினை தொலைக்கிறேன்...! சந்தேகம் வேண்டாமடி சந்திரனும் சொல்வாண்டி...! சாட்சியென கொள்ளடி சம்மதமென கொஞ்சம் சொல்லடி...!                    ✍விசித்திரக்கவி

நெஞ்சோரம் கொஞ்சம் கலவரம் கூட்டடி...!

Image
சித்திரங்கள் பார்க்குதடி சிலையெல்லாம் வேர்க்குதடி...! சிணுங்கி சிணுங்கி நீ சிரித்தால், சித்திரங்கள் பாவமடி... பட்டு உடையில் சிட்டென நீ வந்தால், சட்டென உடையும் என் இதயமடி...! சந்தனமும் குங்குமமும் சங்கீதம் பாடுதடி...! சித்திரை நிலவாய் தேகம் மின்னுதடி...! வளையளும் கொலுசும் என்னடி பேசுது...? உனை கண்டால்-என்  கண்களுமிங்கே கூசுது...! மல்லிகை பூவும் மனசுக்குள்ளே பாடுதோ...! மானே நீ தொட்டதால்,சிலிர்த்ததோ...! தோகை மயிலாய் ஆடுகிறேன்,பாடுகிறேன்...! பாவை நீயும் பார்த்திடடி  நெஞ்சோரம் கொஞ்சம் கலவரம் கூட்டடி...!             ✍விசித்திரக்கவி 

விசித்திர வரிகளின் சொந்தக்காரி

Image
  விசித்திர வரிகளுக்கு இவள் சொந்தக்காரி எனையாளும் மாயங்கள் தெரிந்த மந்திரக்காரி... காலமெல்லாம் என் காற்றுப் பைக்குள் கடிகார முள்ளாய் சுற்றும் தந்திரக்காரி... மூக்கு வியர்க்கும் முன் கோபக்காரி மூச்சென துடிக்கும் முல்லைபூ வாசக்காரி  நிழலென வருவாள் நிம்மதி தருவாள் நித்தம் அணைப்பாள் அனைத்தும் ஆவாள்... ஆக்கத்தின் ஆதாரமாய் -என்  ஏக்கத்தின் அச்சாரமாய் என்னுள் வாழ்கிறாள்...                  ✍விசித்திரக்கவி 

வரிகளாய் வாழ்வேனா...

Image
  தேனென இன்னிக்கும் தேவியின் கன்னங்கள் தெவிட்டாத இன்பத்தின் இதயச் சின்னங்கள்...! அல்லி இதழின் அதிசயப் பிளவில் முல்லை சிரிப்பென  முரசாய் சாட்டுகிறாள்...! நெஞ்சோரம் வேதனை கூட்டுகிறாள்-என்  விழியோரம் விளம்பரம் காட்டுகிறாள்...! விண்ணோடு வில்கொண்டு என்னோடு சமர் செய்கிறாள்...! மையுண்ட மலர்விழியால்  மண்ணோடு சாய்க்கிறாள் மடியோடு அணைத்து மனதிலே மத்தளம் கொட்டுகிறாள்...! காற்றிலே அசையும் நாணல் இடைகாட்டி நாணத்தால் நெளிகிறாள் கருநிற குழல் போர்த்தி மோகத் தீயாய் சுடுகிறாள்...! சகியின் சபரக் கண்களால் கற்பனைச் சாகரத்தில் ஆழ்த்திப் போகிறாள்...! பேதை நானும் ,  காகிதம் கொண்டு கொஞ்சம் நீந்திடுவேனா...! வரிகளாய் கொஞ்சம் வாழ்ந்திடுவேனா...!                ✍விசித்திரக்கவி